districts

img

சிபிஎம் உறுப்பினர் ரசீது வழங்கும் பேரவை

திருவாரூர், ஜூன் 5-

     திருவாரூர் மாவட்டம் குடவாசல் சிபிஎம் கட்சி  அலுவலகத்தில் ஒன்றிய,  நகர கட்சி உறுப்பினர் களுக்கு கட்சி ரசீது வழங் கும் பேரவைக் கூட்டம் நடைபெற்றது.

    குடவாசல் சிபிஎம் தெற்கு ஒன்றிய குழுச் செயலாளர் ம.கோபிநாத் தலைமை வகித்தார். நகரக் குழு செயலாளர் டி.ஜி.சேகர்  முன்னிலை வகித்தார். மாவட்டச் செயலாளர் ஜி. சுந்தரமூர்த்தி மத்திய, மாநில  முடிவுகளை விளக்கி பேசி னார்.

   மாவட்டக் குழு உறுப்பி னர்கள் எப்.கெரக்கோரியா, ஆர்.லெட்சுமி மற்றும் ஒன்றிய குழு, நகர குழு  கட்சித் தோழர்கள் பங்கேற்ற னர்.

    கூட்டத்தில், குடவாசல் நகரக் குழு உறுப்பினர் ஆர். ராஜா முயற்சியால் குட வாசல் சிபிஎம் அலுவலகத் திற்கு சுமார் ரூ.30,000 மதிப்பில் வர்ணம் பூசப் பட்டது. இம்முயற்சியை பாராட்டி மாவட்டச் செய லாளர் ஜி.சுந்தரமூர்த்தி தோழர் ராஜாவுக்கு சால்வை  அணிவித்து பாராட்டினார்.

நாகப்பட்டினம்

     நாகை மாவட்டம் வேதா ரண்யம் அடுத்த கரியாப்பட்டினம் சமுதாய கூடத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மத்திய குழு  முடிவுகள் விளக்க உரை,  கட்சி உறுப்பினர் ரசீது  வழங்கும் விழா நடைபெற் றது. இதில் கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி, மாவட்ட செயற் குழு உறுப்பினர் கோவை  சுப்பிரமணியன், ஒன்றியக் குழு தலைவர் எஸ்.அம்பிகா பதி, ஒன்றிய செயலாளர் ஏ.வெற்றியழகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தஞ்சாவூர்

    தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டையில் மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  உறுப்பினர் ரசீது வழங்கும் விழா ஒன்றியச் செயலாளர் ஏ.நம்பிராஜன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில், மாவட்டச் செயற்குழு உறுப் பினர் என்.வி.கண்ணன், மாவட்டக்குழு உறுப்பினர் எம்.மாலதி ஆகியோர் கட்சி உறுப்பினர்களுக்கு ரசீது வழங்கினர். ஒன்றியக்குழு உறுப்பினர்கள் உட்பட பலர்  கலந்து கொண்டனர்.