இந்தியா கூட்டணி சார்பில் மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் வழக்கறிஞர் சுதாவை ஆதரித்து, தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பகுதியில் ஆட்டோ தொழிலாளர்கள் வாக்குச் சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர். ஆட்டோ தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் ஜெயக்குமார், கும்பகோணம் மாநகர மேயரும் ஆட்டோ தொழிலாளியுமான மேயர் சரவணன், நகரச் செயலாளர் கார்த்திகேயன் உள்ளிட்ட ஆட்டோ தொழிலாளர்கள் கை சின்னத்திற்கு வாக்கு கேட்டு பிரச்சாரம் செய்தனர்.