districts

img

தோழர் பி.ராமமூர்த்தி நினைவு தினம்: சிபிஎம் அஞ்சலி

கும்பகோணம், டிச.15- இந்திய சுதந்திர போராட்ட வீரரும்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  ஸ்தாபகர்களில் ஒருவருமான முது பெரும் தோழர் பி.ஆர். என்றழைக்கப் படும் தோழர் பி.ராமமூர்த்தி நினைவு தினத்தையொட்டி, தோழர் ராமமூர்த்தி வாழ்ந்த இடமான கும்பகோணம் அருகே உள்ள வேப்பத்தூர் கிராமத் தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் செவ்வணக்கம் புகழஞ்சலி செலுத்தப்பட்டது. திருவிடைமருதூர் வடக்கு ஒன்றிய செயலாளர் நாகேந்திரன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பி னர் சின்னை.பாண்டியன், ஆர்.மனோ கரன், சி.ஜெயபால், மாவட்ட குழு  உறுப்பினர் சா.ஜீவபாரதி, பக்கிரிசாமி,  நாகராஜன், சிஐடியு கூட்டுறவு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சேகர், கும்ப கோணம் நகர செயலாளர் செந்தில்குமார்,  திருப்பனந்தாள் ஒன்றிய செயலாளர் டி.ஜி.ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர்.  முன்னதாக திருவிடைமருதூரில் உள்ள பி.ஆர். நினைவகத்தில் சிபிஎம் செயற்குழு உறுப்பினர் ஜெயபால், வேப்பூரில் சின்னை.பாண்டியன் செங் கொடி ஏற்றினர். டிச.18, 19 தேதிகளில் நடைபெற்ற உள்ள தஞ்சை மாவட்ட மாநாட்டையொட்டி டிச.17 ஆம் தேதி தோழர் பி.ராமமூர்த்தி நினைவு ஜோதி புறப்பட உள்ளது. திருச்சிராப்பள்ளி திருச்சி வெண்மணி இல்லத்தில் மாநிலக் குழு உறுப்பினர் ஸ்ரீதர் தலைமை யில் மாநகர் மாவட்டச் செயலாளர் ராஜா,  புறநகர் மாவட்டச் செயலாளர் ஜெய சீலன் மற்றும் மாநகர், புறநகர் மாவட்ட  செயற்குழு உறுப்பினர்கள் அஞ்சலி செலுத்தினர்.

;