ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா
மயிலாடுதுறை, ஆக.18 - தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் பணி ஓய்வு பெற்ற முதுகலை ஆசிரியர்களுக்கு பணி நிறைவு பாராட்டு மற்றும் பதவி உயர்வு பெற்ற முதுகலை ஆசிரி யர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி பெஸ்ட் மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியில் நடந்த விழாவிற்கு மாவட்டத் தலைவர் ப.அருள் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் இரா.கார்த்திக், தலை மையிடச் செயலாளர் க. மணிவண்ணன், மகளி ரணி செயலாளர் கே. சாந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழாவில் பணி ஓய்வு பெற்ற முது கலை ஆசிரியர்கள் (தலைமையாசிரியர்கள்) ஏற்புரையாற்றினர்.
விழிப்புணர்வு ஊர்வலம்
அரியலூர், ஆக.18 - அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் போலீ சார் மற்றும் பாத்திமா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி சார்பில் போதைப் பொருள் ஒழிப்பு குறித்தான விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடை பெற்றது. இதனை ஜெயங் கொண்டம் காவல் துணை கண்காணிப்பா ளர் இராமச்சந்திரன் தொடங்கி வைத்தார். மாணவர்கள், ஜெயங் கொண்டம் நான்கு ரோடு மற்றும் முக்கிய வீதி களின் வழியே ஒலிம்பிக் தீபம் ஏந்தி போதைப் பொருள் ஒழிப்பு விழிப்பு ணர்வு ஊர்வலத்தை நடத்தினர்.
மாணவர்களுக்கு பரிசு
அறந்தாங்கி, ஆக.18 - புதுக்கோட்டை மாவட் டம் அறந்தாங்கி ஒன்றி யம் கீழையூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் சுதந்திர தின விழா நடை பெற்றது. விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரி யர் (பொ) அனிதா தலைமை வகித்தார். சேந்தாகுடி ஊராட்சி மன்ற தலைவர் தமிழர சன் தேசிய கொடி ஏற்றினார். நிகழ்ச்சியில் பள்ளியின் சிறந்த மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கி பாராட் டினர். மேலும் பள்ளி வளாகத்தில் மரக்கன்று கள் நடப்பட்டன.
சிபிஎம் கொடியேற்று நிகழ்ச்சி
தஞ்சாவூர், ஆக.18- தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை ஒன்றி யம், நாட்டுக்கோட்டை யில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கொடி யேற்று நிகழ்ச்சி சந்திர சேகரன் தலைமையில் நடைபெற்றது. சிபிஎம் பட்டுக்கோட்டை ஒன்றியச் செயலாளர் எஸ்.கந்தசாமி கொடி யேற்றி வைத்துப் பேசி னார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எம்.செல்வம், மாவட்டக் குழு உறுப்பினர் பி.எம். இளங்கோவன், ஒன்றியக் குழு உறுப்பினர் கள், தமிழ்நாடு விவசா யிகள் சங்க ஒன்றியத் தலைவர் மகாலிங்கம் மற்றும் கிளை உறுப்பி னர்கள் கலந்து கொண்ட னர்.
தஞ்சை அரண்மனை வளர்ச்சிப் பணிகளை ஆட்சியர் ஆய்வு
தஞ்சாவூர், ஆக.18 - தஞ்சாவூர் அரண்மனையில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சிப் பணிகள், முன்னேற்றம் குறித்து மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம், சனிக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அரண்மனை வளாக தர்பார் கூடத்தில் ரூ.6.78 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பணிகள் முன்னேற்றம் குறித்தும், அரண்மனை வளாக சாம்பாஜி குடியிருப்பு பகுதி ரூ.3.8 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் புனரமைப்பு பணிகளையும், அரண்மனை வளாக கலைக்கூடத்தில் நடை பெற்று வரும் புனரமைப்பு பணிகள் முன்னேற்றம் குறித்தும், இராச இராசன் மணிமண்டபத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்தும், அருங்காட்சியகத்தில் தஞ்சாவூர் கைவினைப் பொருள் ரதம் தயாரிப்பு குறித்த பயிற்சி வகுப்பு நடைபெறுவதையும் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து பணிகளை விரைவாக முடிக்க சம்பந்தப்பட்ட துறை அலு வலர்களுக்கு உத்தரவிட்டார்.
விவசாயத் தொழிலாளர்கள் சங்க பயிற்சி வகுப்பு
தஞ்சாவூர், ஆக.18 - அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் பூதலூர் வடக்கு, பூதலூர் தெற்கு, திருவையாறு ஒன்றியங்களின், விவசாயத் தொழிலாளர் சங்க முன்னணி ஊழியர்கள் பயிற்சி வகுப்பு, தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளியில் சனிக் கிழமை நடைபெற்றது. “அமைப்பை வலுப்படுத்துவோம், விரிவு படுத்துவோம்” என்ற தலைப்பில் நடைபெற்ற முதல் அமர்விற்கு பூதலூர் தெற்கு விவசாயத் தொழிலாளர் சங்க ஒன்றியச் செயலாளர் எஸ்.வியாகுலதாஸ் தலைமை வகித்தார். மாநிலச் செய லாளர் வி.மாரியப்பன் பேசினார். “நூறு நாள் வேலையும், மக்கள் எதிர்கொள்ளும் பிரச்ச னையும்” என்ற தலைப்பில் நடைபெற்ற இரண்டாவது அமர்வுக்கு பூதலூர் வடக்கு விவசாயத் தொழிலாளர் சங்கம் ஒன்றியச் செயலாளர் எஸ்.மெய்யழகன் தலைமை வகித்தார். மாநிலக் குழு உறுப்பினர் கே.பக்கிரிசாமி பேசினார். மூன்றாவதாக “குடிமனை ஸ்தல இயக்கம்” என்ற தலைப் பில் நடைபெற்ற அமர்வுக்கு வி.தொ.ச மாவட்டத் தலைவர் ஆர்.பிரதீப் ராஜ்குமார் தலைமை வகித்தார். வி.தொ.ச மாவட்டச் செயலாளர் ஆர்.வாசு சிறப்புரையாற்றினார். இதில், சிபிஎம் மாவட்டக் குழு உறுப்பினர் பி.கலைச் செல்வி, ஒன்றியச் செயலாளர் எம்.ரமேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பருத்தி மறைமுக ஏலம்
பாபநாசம், ஆக.18 - வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின்கீழ் இயங்கி வரும் தஞ்சாவூர் விற்பனைக் குழு விற்குட்பட்ட பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி மறைமுக ஏலம் நடந்தது. பருத்தி மறைமுக ஏலத்தில் பாபநாசம், அதன் சுற்று வட்டாரப் பகுதிகளான மதகரம், சத்தியமங்கலம், வலங்கை மான், கோபுராஜபுரம், அய்யம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளி லிருந்து சுமார் 1050 விவசாயிகள் 154 மெ.டன் பருத்தியை விற்பனைக்கு எடுத்து வந்தனர். இதில் கும்பகோணம், செம்பனார்கோவில், பழனி, பண்ருட்டி, விழுப்புரம், ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, தெலுங்கானா, தேனி உள்ளிட்ட பகுதி களைச் சேர்ந்த 9 வணிகர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் அதிகபட்சம் குவிண்டால் ஒன்றிற்கு ரூ.7309, குறைந்தபட்சம் ரூ.6609, சராசரி ரூ.6970 என விலை நிர்ணயித்தனர். பருத்தியின் மொத்த மதிப்பு ரூ.1.06 கோடி. பருத்தி மறைமுக ஏலத்திற்கு விற்பனைக் கூட கண்காணிப்பாளர் தாட்சாயினி தலைமை வகித்தார். பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் கடந்த வாரத்தில் 5 மெ.டன் எள் அதிகபட்ச விலை குவிண்டா லுக்கு ரூ.13000-க்கும், உளுந்து அதிகபட்ச விலை குவிண்டாலுக்கு ரூ.9800-க்கும், கொப்பரை தேங்காய் அதிக பட்ச விலை குவிண்டாலுக்கு ரூ.7000-க்கும் விற்பனையா னது. எள், உளுந்து, பச்சைப்பயறு, கொப்பரை மற்றும் பாரம்பரிய நெல் வகைகள் ஏல முறையில் தரத்திற்கேற்ப நல்ல விலைக்கு விற்பனை செய்து தரப்படுகின்றன.
தரமற்ற மாட்டிறைச்சி விற்பனை: 2 கடைகளுக்கு அபராதம்
தஞ்சாவூர், ஆக.18 - தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அண்ணா குடி யிருப்பு பகுதியில், மூன்று மாட்டிறைச்சி கடைகளில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட புகாரின் அடிப்படை யில், பட்டுக்கோட்டை நகர உணவு பாதுகாப்பு அலுவலர் வேல்முருகன் தலைமையில், அண்ணா குடியிருப்பு பகுதி யில் உள்ள மூன்று மாட்டிறைச்சி கடைகளை திடீர் ஆய்வு செய்தனர். ஆய்வில், தரம் குறைவான மூன்று கிலோ மாட்டிறைச்சி பறிமுதல் செய்யப்பட்டு பினாயில் ஊற்றி அழிக்கப்பட்டது. பின்னர் அருகில் உள்ள இரண்டு மாட்டிறைச்சி கடைகளை ஆய்வு செய்த போது, எந்த ஒரு உரிமம் இல்லாமலும் மாட்டு இறைச்சிக் கழிவுகள் சுமார் 1,900 கிலோ திறந்த நிலையில் பொதுமக்களுக்கு தொற்று நோய் ஏற்படுத்தும் வகையி லும், துர்நாற்றத்துடன் பொதுவெளியில் கொட்டி வைக்கப் பட்டிருந்தது. அவை பறிமுதல் செய்து அகற்றப்பட்டன. மேலும், கடைகளில் உள்ள வளாகத்தில் இறைச்சிக்காக வளர்க்கப்பட்ட மாடுகளின் தன்மை குறித்து நடந்த ஆய்வில், இரண்டு மாடுகள் நோய்வாய்ப்பட்டு இருந்தது கண்டறியப் பட்டு அந்த மாடுகளை இறைச்சிக்கு பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இனிவரும் காலங்களில், மாடுகளை நகராட்சி ஆடு வதை கூடாரத்தில்தான் வதை செய்ய வேண்டும் என அறி வுறுத்தப்பட்டது. மேலும், இரண்டு கடைகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் வீதம் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினருக்கு கடன் வழங்க ஆக.27, 28, 29-இல் சிறப்பு முகாம்
தஞ்சாவூர், ஆக.14 - தமிழ்நாடு சிறுபான்மை யினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (டாம்கோ) மற்றும் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொரு ளாதார மேம்பாட்டுக் கழகம் (டாப்செட்கோ) மூலம் ஒவ் வொரு ஆண்டும் தமிழ் நாட்டைச் சார்ந்த பிற்ப டுத்தப்பட்டோர்கள் மற்றும் சிறுபான்மையினர்களுக்கு பல்வேறு கடன்கள் வழங்கப் பட்டு வருகின்றன. டாம்கோ மற்றும் டாப் செட்கோ மூலம் செயல் படுத்தப்படும் பல்வேறு திட்டங்களான தனிநபர் கடன் திட்டம், சுயஉதவிக் குழுக் களுக்கான சிறுதொழில் கடன் திட்டம், கல்வி கடன் திட்டம் ஆகிய திட்டங்க ளுக்கான கடன் வழங்கும் சிறப்பு முகாம்கள் ஆக.27 அன்று தஞ்சாவூர் மத்திய கூட்டுறவு வங்கியிலும், ஆக. 28 அன்று கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கியி லும், ஆக.29 அன்று பட்டுக் கோட்டை கூட்டுறவு நகர வங்கியிலும் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறவுள்ளது. மேற்படி கடன் பெறுவ தற்கு 18 முதல் 60 வயது உடைய தகுதியானவர்கள், சிறப்பு முகாம்களில் கலந்து கொண்டு விண்ணப்பிக்க லாம். கடன் மனுக்களுடன் மனுதாரரின் சாதிச்சான்று, ஆதார் அட்டை, வருமானச் சான்று, குடும்ப அட்டை, இருப்பிடச் சான்று, கடன் பெறும் தொழில் குறித்த விவரம் - திட்ட அறிக்கை மற்றும் கூட்டுறவு வங்கி கோரும் இதர ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். கல்விக் கடனுக்கு விண்ணப்பிக்கும் போது பள்ளி மாற்றுச் சான்றிதழ், உண்மைச் சான்றிதழ் (போனபைட் சர்டிபிகேட்) கல்விக் கட்டணங்கள் செலுத் திய ரசீது-செலான் (அசல்) மற்றும் மதிப்பெண் சான்றி தழ் ஆகிய ஆவணங்களின் ஒளிப்பட நகல்களையும் சமர்ப்பிக்க வேண்டும். இச்சிறப்பு முகாம்களில் கலந்து கொண்டு அனைத்து பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் இனத்தை சேர்ந்தவர்கள் கடன் உதவி பெற்றுப் பயன டையுமாறு மாவட்ட ஆட்சி யர் பா.பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.
கருக்கலைப்பு சிகிச்சையில் பெண் உயிரிழப்பு: தனியார் ஸ்கேன் சென்டருக்கு சீல்
பொன்னமராவதி, ஆக.18 - கருக்கலைப்பின் பெண் உயிரிழந்த நிலையில், தனியார் மருத்துவமனையின் ஸ்கேன் சென்டருக்கு சீல் வைக்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள மஞ்சுவிடுதி கிராமத்தைச் சேர்ந்தவர் பரிமளேஸ்வரன் மனைவி கலைமணி. நான்கு மாத கர்ப்பிணியான இவர், கடந்த ஆக.14 அன்று பொன்னம ராவதி ஸ்ரீதுர்கா மருத்துவமனைக்கு கருக் கலைப்பு செய்வதற்காக சென்றுள்ளார். கருக்கலைப்பு சிகிச்சையில் அதிக ரத்தப் போக்கு ஏற்பட்டு கலைமணி உயிரிழந்த நிலையில், அவரது உறவினர்கள் மருத்துவ மனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு காவல்துறையில் புகார் அளித்த னர். புகாரின் அடிப்படையில் பொன்னமரா வதி காவல்துறையினர் கலைமணியின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக புதுக் கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். சட்டவிரோதமாக பாலினத்தை வெளிப் படுத்தி கருக்கலைப்பு செய்து வரும் மேற் கண்ட தனியார் மருத்துவமனை மீது நட வடிக்கை எடுத்து, கலைமணி உயிரிழக்க கார ணமான மருத்துவர்களை கைது செய்யக் கோரி, கலைமணியின் உறவினர்கள் புதுக் கோட்டை - தஞ்சாவூர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து ஆக.16 அன்று சுகாதாரத் துறை இணை இயக்குநர் ஸ்ரீபிரியா தேன்மொழி, குடும்ப நலத்துறை துணை இயக்குநர் கோமதி தலைமையிலான அதி காரிகள், தனியார் மருத்துவமனையை ஆய்வு செய்து அங்குள்ள ஸ்கேன் சென்ட ருக்கு சீல் வைத்தனர். மேலும், மருத்து வமனைக்கு வழங்கப்பட்ட குடும்ப கட்டுப் பாடு சிகிச்சை தொடர்பான அனுமதியையும் ரத்து செய்தனர். புகார் தொடர்பாக முழுமையாக ஆய்வு செய்து, கலைமணிக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் குறைபாடுகள் இருந்தது கண்ட றியப்பட்டால், சம்பந்தப்பட்ட மருத்துவ மனை மற்றும் மருத்துவர்கள் மீது அடுத்தக் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரி வித்தனர்.
கும்பல் பாலியல் வன்கொடுமை வழக்கு: பெண் எஸ்.ஐ. ஆயுதப்படைக்கு மாற்றம்
தஞ்சாவூர், ஆக.18 - தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயது இளம் பெண் ஒருவரை, அப்பகுதி யைச் சேர்ந்த 17 வயது சிறுவன் உட்பட நான்கு பேர் கும்பல் பாலியல் பலாத்காரம் செய்த னர். இது தொடர்பாக ஒரத்தநாடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தினர் வழக்குப் பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். இதையடுத்து இளம்பெண் அளித்த வாக்குமூலம் அடிப்படையில் பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகிறது. அதன்படி, ஏற்கனவே பாதிக்கப்பட்ட இளம்பெண்ணுக்கு சிகிச்சை அளிக்க மறுத்த பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு நீதிமன்றம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி யுள்ளது. இதற்கிடையில், சம்பவம் நடந்த ஆக.12 ஆம் தேதி பாப்பாநாடு காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளிக்கச் சென்றுள்ளார். அப்போது அங்கு பணியில் இருந்த பெண் காவல் உதவி ஆய்வாளர் சூர்யா பாதிக்கப்பட்ட பெண்ணிடம் புகார் மனுவை பெறாமல், ஒரத்தநாடு மகளிர் காவல் நிலையத்திற்கு அனுப்பி அலைக்கழித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து எழுந்த புகாரின் அடிப்ப டையில், காவல் நிலையத்திற்கு வந்த பெண்ணிற்கு உடனடியாக சட்ட உதவி வழங்காமல் அவரை அலைக்கழித்தும், உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்காமலும் பணித் தன்மையில் அலட்சியமாக செயல் பட்டதை, தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ்ராவத் உறுதிப் படுத்தி, பெண் காவல் உதவி ஆய்வாளர் சூர்யாவை ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டார்.
பாத மருத்துவ மையம் மூலம் கால் இழப்பு 50 சதவீதம் தடுப்பு
தஞ்சாவூர், ஆக.18 - தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலுள்ள பாத மருத்துவ மையம் மூலம் சர்க்கரை நோயாளிகளின் கால் இழப்பு 50 சதவீதம் தடுக்கப்பட்டுள்ளது என கல்லூரி முதல்வர் ஆர். பாலாஜிநாதன் தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில், “பாதம் காப்போம்” திட்டத்தின் கீழ் தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்களி லுள்ள ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர்களுக்கான பயிலரங்கத்தில் பங்கேற்ற பின்பு, அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் ஓராண்டுக்கு முன்பு பரிசோதனை அடிப்படையில் பாத மருத்துவ மையத்தைத் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். இதன் மூலம் மாவட்டத்திலுள்ள பொது அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கு பயிற்சி அளிக்கப் பட்டது. மேலும், மக்களைத் தேடி மருத்துவத் திட்டப் பணியாளர்கள் மூலம் கிராமங்களில் சர்க்கரை நோய்க்கு மாத்திரை வாங்கி சாப்பி டும் ஏறத்தாழ 1.76 லட்சம் பேருக்கு பாதத்தில் புண் வரக்கூடிய நிலைமை இருக்கிறதா? என பரிசோதனை செய்யப்பட்டது. இதன்மூலம் பாதத்தில் புண் ஏற்பட்டு அவதிப்படுபவர்களை கண்டறிந்து, இந்த பாத மருத்துவ மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் ஏறக்குறைய 500 பேருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இவர்களில் ஏறத்தாழ 200 பேருக்கு புண் ஏற்படாமல் தடுக்கும் வகையில் சிறப்புக் காலணி வழங்கப்பட்டு, தொடர் கண்காணிப் பும் செய்யப்படுகிறது. புண் ஏற்பட்டு மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்த சர்க்கரை நோயாளிகளுக்கு கால் இழப்பு ஏற்படு வதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படு கிறது. இதன் மூலம் சர்க்கரை நோயாளி களுக்கு கால் இழப்பு 50 சதவீதம் தடுக்கப் பட்டுள்ளது. இத்திட்டம் வெற்றிகரமாக அமைந்துள்ள தால், இதைத் தமிழக அரசு தற்போது மாநி லம் முழுவதும் ‘பாதம் பாதுகாப்போம் திட்டம்’ என்ற பெயரில் விரிவுபடுத்துகிறது. இதன் மூலம் 15 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் பாத மருத்துவ மையம் அமைக்கப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.