அறந்தாங்கி, ஜூலை 19 -
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகராட்சி அருகே இயங்கி வரும் அங்கன்வாடியில் சுமார் 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். மாதத்தின் 3வது புதன்கிழமையில், சுகாதாரத் துறை சார்பாக அங் கன்வாடியில் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்படும்.
இந்நிலையில் புதனன்று (ஜூலை 19) தடுப்பூசி போடு வதற்கு 15 குழந்தைகள் பெற்றோர்களுடன் வந்திருந்த னர். இதில் 13 பேர் தடுப்பு ஊசி போட்டுவிட்டுச் சென்ற னர். மீதம் 2 குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் நிலையில், திடீரென கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் குழந்தைகள் சிறிய காயங்களுடன் நூலிழையில் உயிர் தப்பினர். காயமடைந்த 2 குழந்தைகளும் சிகிச் சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.
இந்த அங்கன்வாடி கட்டிடம் சுமார் 30 ஆண்டு களுக்கு முன்பு கட்டப்பட்டது. கடந்த 2021 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் புனரமைக்கும் பணிகள் நடைபெற்ற நிலையில், தற்போது மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஆபத்தான பழைய கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டித் தர வேண்டுமென பெற்றோர்களும், அப்பகுதி மக்களும் வேண்டுகோள் விடுத்தனர்.