districts

img

ஊரகப் பகுதிகளில் மக்களுடன் முதல்வர் முகாம்

திருவாரூர், ஜூலை 23 - திருவாரூர் மாவட்டம் கொரடாச் சேரி ஒன்றியம் பெருமாளகரத்தில் தமிழ் நாடு முதலமைச்சரின் மக்களுடன் முதல்வர் திட்டத்தின்கீழ் பொதுமக்களி டமிருந்து மனுக்கள் பெறப்படுவதை மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ மற்றும் திரு வாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி. கே.கலைவாணன் ஆகியோர் பார்வை யிட்டனர். மாவட்ட ஊராட்சித் தலைவர்  கோ.பாலசுப்ரமணியன் உடனிருந்தார். நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் தெரி விக்கையில், திருவாரூர் மாவட்டத்தி லுள்ள 10 வட்டாரங்களில், மொத்தமாக 430 கிராம ஊராட்சிகளையும் உள்ளடக்கி  11.7.2024 முதல் 22.8.2024 வரை 13 நாட்க ளில் 53 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட வுள்ளன. இம்முகாமில், 15 துறைகளைச் சேர்ந்த 44 சேவைகளை பொதுமக்க ளுக்கு விரைவாக வழங்கிடும் பொருட்டு இத்திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. மேற்படி முகாம்களில் பெறப்ப டும் மனுக்களை 30 நாட்களுக்குள் முடிவு செய்து, பொதுமக்களின் கோரிக் கைகளை நிவர்த்தி செய்திட வழி வகை செய்யப்பட்டுள்ளது. இம்முகா மில், பயனாளிகளின் தேவைக்கேற்ப ஒன்றுக்கு மேற்பட்ட மனுக்கள் வழங்க லாம். உங்களுடைய மனுக்களை கட்டா யம் பதிவு செய்து பதிவு எண்களைப் பெற்றுக் கொள்ளுங்கள். பதிவு எண் இருந்தால் மட்டுமே, மனுக்களின் நிலை  குறித்து கண்காணிக்க முடியும்” என்றார். கலைஞரின் கனவு இல்ல திட்டத்தின் கீழ் 30 பேருக்கு நிர்வாக அனுமதிக்கான  ஆணையையும்,  5 தாய்மார்களுக்கு கர்ப்பிணி பெண்களுக்கான ஊட்டச்சத்து  பெட்டகத்தினையும் மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ, திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி.கே.கலைவாணன் ஆகியோர் வழங்கினர்.  வாட்டாத்திக்கோட்டை தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி  அருகே உள்ள வாட்டாத்திக்கோட்டை யில், மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு  முகாம் செவ்வாய்க்கிழமை நடை பெற்றது. வாட்டாத்திக்கோட்டை ஊராட்சி மன்றத் தலைவர் பரமேஸ்வரி பன்னீர்செல்வம் வரவேற்றார். மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் வெங்கடேஸ்வரன், பட்டுக்கோட்டை வட்டாட்சியர் சுகுமார், பேராவூரணி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சாமி நாதன், செல்வேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பி னர் நா.அசோக்குமார் தலைமை வகித்து முகாமைத் தொடங்கி வைத்துப்  பேசினார். முகாமில் துறை வாரியாக ஏராளமான கோரிக்கை மனுக்களை பொதுமக்கள் அளித்தனர்.