districts

img

சிறந்த நகராட்சியாக திருவாரூர் தேர்வு

திருவாரூர், ஆக.28 - திருவாரூர் நகராட்சி சிறப்பு கூட்டம்  புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத் தில் திருவாரூரை சிறந்த நகராட்சி யாக தேர்வு செய்தமைக்கு, தமிழக முதல் வருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. கூட்டத்திற்கு நகராட்சித் தலைவர் புவனபிரியா செந்தில் தலைமை வகித் தார். நகராட்சி ஆணையர் பிரபாகரன் முன்னிலை வகித்தார். நகராட்சி மன்ற உறுப்பினர்கள், தங்கள் நகராட்சி வார்ட்டில் உள்ள சாலை வசதி, மின்  வசதி, குடிநீர் குழாய் பதிக்கும் போது  ஏற்படும் பாதிப்புகள் மற்றும் ஆக்கிர மிப்புகளை அகற்றுதல் உட்பட பல்வேறு பிரச்சனைகளை எடுத்துரைத் தனர். நகராட்சி மார்க்கெட் உள்ளிட்ட பகுதியில் தரைக்கடை வசூல் செய்ய  ஏலத்தொகை ரூ.5 லட்சம் என குறிப் பிடப்பட்டுள்ளது. நகரில் எத்தனை தரைக் கடைகள் உள்ளன; ஒரு கடைக்கு  எவ்வளவு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது என்பதை கூட்டத்தில் தெரி விக்க வேண்டும். சாதாரணமாக கூடை யில் கீரைக்கட்டு விற்பனை செய்பவ ருக்கும் ஒரே மாதிரியான வாடகை என்றால், சிறு வியாபாரிகள் பாதிக்கப் படுவார்கள். இவர்களிடம் தினசரி ரூ.50 வசூல் செய்வதாக தீர்மானிக்கப்பட்டுள்ள விஷயம், வியாபாரிகளிடையே கவ லையை, அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. சிறு வியாபாரிகளை பாதிக்காத  வகையில் வாடகை வசூல் இருக்க வேண்டும். இவற்றையெல்லாம் சரி செய்துவிட்டு ஏலத்தை அறிவிக்கலாம். இல்லாவிடில் ஏலத்தை ரத்து செய்யுங் கள். தரைக்கடை வாடகையை முறை படுத்திய பின், ஏலத்தை அறிவிக்க வேண்டும். முக்கிய வார்டு பகுதிகளில் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும்.  வாழவாய்க்கால் ரவுண்டானா அருகில் உள்ள குளத்தை தூர்வார வேண்டும். பழுதடைந்த ரேசன் கடை கட்டடத்தை சரிசெய்து தர வேண் டும். மழைநீர் வடிகால், வாய்க்கால் களை தூர்வார வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தினர். முன்னதாக தமிழ்நாடு அரசு, திருவா ரூர் நகராட்சியை முதன்மை நகராட்சி என தேர்வு செய்தமைக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் நேரு,  திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கே.கலைவாணன் ஆகியோ ருக்கு மன்ற உறுப்பினர்கள் வாழ்த்தும்,  நன்றியும் தெரிவித்தனர்.  நகராட்சியில் உள்ள தூய்மைப் பணி யாளர்கள், ஊழியர்களின் அர்ப்பணிப்பு  உணர்வை, பாராட்டி பரிசுகள் வழங்கப் பட்டன.