திருவாரூர், ஏப்.20-
திருவாரூர் புதிய பேருந்து நிலையம் செல்லும் பாதை மிகவும் மோசமாகவும், குண்டு குழியுமாகவும் உள்ளதால், அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே, இச்சாலையை உடனடியாக தரம் உயர்த்த வலியுறுத்தி சிஐடியு ஆட்டோ சங்கத்தின் மாவட்டக் குழு சார்பில் வியாழக்கிழமை புதிய பேருந்து நிலையம் எதிரே சாலை மறி யல் போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்திற்கு சிஐடியு மாவட்டத் தலைவர் எம்.கே.என்.அனிபா தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் டி.முருகையன், பொருளா ளர் இரா.மாலதி, மாநிலக் குழு உறுப் பினர் ஏ.பிரேமா மற்றும் மாவட்ட நிர்வா கிகள் மறியலில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த நகராட்சி அலுவலர்கள் போராட் டக்காரர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தையில் ஏப்ரல் 30-ஆம் தேதிக்குள் தரமான சாலை அமைப்ப தாக திருவாரூர் நகராட்சி ஆணையர் பிரபாகரன் உறுதி அளித்ததின் பேரில் போராட்டம் தற்காலிகமாக விளக்கிக் கொள்ளப்பட்டது.