districts

img

அரியலூர் அரசு சிமெண்ட் ஆலையில் ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரம் செய்யக் கோரி சிஐடியு ஆர்ப்பாட்டம்

அரியலூர், ஜூலை 30 - ஒப்பந்தத் தொழிலாளர்களை நிரந்தரம் செய்யக் கோரி அரியலூர் சிமெண்ட் ஆலை தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரியலூரில் அரசு சிமெண்ட் ஆலையில் நிலம் கொடுத்த தொழிலாளிகளுக்கும், இறந்த தொழிலாளிகளின் வாரிசுக்கு வேலை வழங்க வேண்டும். ஒப்பந்தத் தொழிலாளிகளை நிரந்தரம் செய்ய வேண்டும். லோடிங் வேலை செய்யும் தொழிலாளிக்கு ஈ.கிரேடு சம்பளம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்தில் மாநிலத் துணைத் தலைவர் எஸ்.ரங்கராஜன், மாவட்டச் செயலாளர் துரைசாமி, மாவட்டத் தலைவர் கிருஷ்ணன், மாவட்டத் துணைத் தலைவர் சிற்றம்பலம், ஒப்பந்தத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் அருண்பாண்டியன் உட்பட 60-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.