districts

img

சர்வதேச சமாதான தினம் இஸ்ரேலை கண்டித்து சிஐடியு ஆர்ப்பாட்டம்

திருச்சிராப்பள்ளி, செப்.1 - பாலஸ்தீனத்தில் பள்ளிகள், மருத்துவமனைகள், தேவாலயங்கள் மீது இஸ்ரேல் கொடூரமான தாக்குதல் நடத்தி பல்லாயிரக்கணக்கான மக்கள் மற்றும் குழந்தைகளை படுகொலை செய்வதை கைவிட வேண்டும்.  அமெரிக்கா, ஆயுதங்களின் விற்பனைக்காக போர்களை தூண்டுவதை கைவிட வேண்டும். 50 ஆண்டுகள் பொருளாதாரத் தடைக்குப் பிறகு நிமிர்ந்து நிற்கும் சோசலிச கியூபா மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும்.  உக்ரைன் - ரஷ்யா போரை நிறுத்த வலியுறுத்தி சிஐடியு திருச்சி மாநகர் மாவட்டக் குழு சார்பில் சர்வதேச சமாதான தினமான செப்டம்பர் 1 அன்று தென்னூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாநகர் மாவட்டத் தலைவர் சீனிவாசன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி சிஐடியு மாநகர் மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன் மற்றும் நிர்வாகிகள் பேசினர்.