கரூர், மே 20 - சிஐடியு சங்கத்தின் கரூர் மாவட்ட உதவி செய லாளர் சி.அரவிந்த்-இன் சகோதரர் எட்வின் ராகுல்- பிரின்ஸி டயானா தம்பதியின் திருமண வரவேற்பு விழா தஞ்சாவூரில் நடைபெற்றது. சிஐடியு மாவட்டத் தலைவர் ஜி.ஜீவானந்தம், எல்.பி.எப். மாவட்டத் தலைவர் அண்ணாவேலு, புகளூர் நகராட்சித் தலைவர் குணசேகர், சிபிஎம் கரூர் ஒன்றியச் செயலாளர் ராஜேந்திரன், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் பூரணம், நடராஜன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். சென்னை அயனாவரத்தில், சிஐடியு நடத்தும் நிர்மல் பள்ளியின் வளர்ச்சி நிதியாக ரூ.3 ஆயிரத்தை சிஐடியு மாவட்டத் தலைவர் ஜி.ஜீவானந்தத்திடம் மணமக்கள் வழங்கினர்.