திருச்சிராப்பள்ளி, அக்.13 - திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட எடமலைப் பட்டிபுதூரில் உள்ளது ராமசந்திரா நகர். இங்கு சிஐடியு லோடுமேன் சங்க புதிய கிளை துவக்க விழா சனிக்கிழமை நடந்தது. விழாவிற்கு கிளை தலைவர் சிராஜுதின் தலைமை வகித்தார். லோடுமேன் சங்க மறைந்த தலைவர் ராஜா நினைவு கொடி கம்பத்தில் சிஐடியு கொடியை, சிஐடியு மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன் ஏற்றி னார். சங்க பெயர் பலகையை சுமைப் பணி சங்க மாவட்டச் செயலாளர் சிவக்குமார் திறந்து வைத்தார். முறைசாரா தொழிலாளர்களை நலவாரி யத்தில் இணைப்பதற்கான முகாமை, நல வாரிய அலுவலகத்தில் நடத்திட வேண்டும். சுமைப் பணி தொழிலாளர்களுக்கு தனி நல வாரியம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. புதிய கிளையில் 36 தொழிலாளர்கள் தங்களை இணைத்துக் கொண்டனர். முன்ன தாக சங்க செயலாளர் வசந்த் வரவேற்றார். முடிவில் சங்க பொருளாளர் நவீன் நன்றி கூறி னார்.