districts

img

உ.பி., சண்டிகர் மின் ஊழியர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக சிஐடியு ஆர்ப்பாட்டம்

திருச்சிராப்பள்ளி, டிச.31 - பொதுத்துறை நிறுவனமான மின்வா ரியத்தை கம்பெனிகளாக பிரித்து தனி யாரிடம் கொடுத்ததையும், லாபத்தில் இயங்கும் மின்சார நிறுவனங்களை குறைந்த விலைக்கு தனியாருக்கு விற்பனை செய்ததை கண்டித்தும் உத்தரப் பிரதேசம், சண்டிகரில் போராடும் மின் வாரிய ஊழியர்கள், பொறியாளர்களுக்கு ஆதரவாக சிஐடியு மாநகர் மாவட்டக் குழு சார்பில் செவ்வாயன்று ரயில்வே ஜங்ஷன் எதிரில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாநகர் மாவட்டத் தலைவர் சீனிவாசன் தலைமை  வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி சிஐடியு மாநகர் மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன், அரசு விரைவு போக்கு வரத்து கழக மாநில தலைவர் அருள்தாஸ்,  சிஐடியு மாவட்ட நிர்வாகிகள் பேசினர்.  பெரம்பலூர் சிஐடியு சார்பில் செவ்வாயன்று பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாவட்டத் தலைவர் ஏ.ரெங்கநாதன் தலைமை வகித்தார். மாவட்டச் செய லாளர் எஸ்.அகஸ்டின், மாவட்ட துணைத் தலைவர் எம்.கருணாநிதி, தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு வட்டச் செயலாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் கண்டன உரையாற்றினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர்  ரமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.