திருச்சிராப்பள்ளி, ஆக.28 - மின்வாரியத்தை தனித்தனியாக பிரிப்பதை கைவிட வேண்டுமென வலியுறுத்தி மின் ஊழி யர்கள் ஒலி முழக்க போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் புதனன்று கோரிக்கை அட்டை அணிந்து ஒலி முழக்க போராட்டம், திருச்சி மாவட்டம் தென்னூரில் உள்ள மின்வாரிய மண்டல தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு நடை பெற்றது. போராட்டத்திற்கு வட்டத் தலைவர் நடராஜன் தலைமை வகித்தார். வட்டச் செயலாளர் பழனி யாண்டி, வட்ட பொருளாளர் இருதயராஜ், மாநில துணைத்தலைவர் ரெங்கராஜன் ஆகி யோர் சிறப்புரை ஆற்றினர். நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். தமிழக மின் வாரியத்தை சிறு, சிறு கம்பெனி களாக பிரிப்பதை கைவிட வேண்டும். மின்சார வாரியத்தில் காலியாக உள்ள 59 ஆயிரம் காலிப் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். அரசாணை 100-ன்படி ஏற்படுத்தப் பட்ட ஒப்பந்தத்தை மறு பரிசீலனை செய்து அரசு உத்தரவாதத்துடன் கூடிய ஒப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும். ஊதிய உயர்வு நிலுவைத் தொகையை ஒரே தவணையாக வழங்க வேண்டும். 1.12.2019-க்கு பின் பணியில் சேர்ந்தவர்களுக்கு 6 சதவீதம் ஊதிய உயர்வை வழங்க வேண்டும். கணக்குப் பிரிவு, நிர்வாகப் பிரிவு, கணக்கீட்டு பிரிவு ஊழி யர்களுக்கு பதவி உயர்வை உடனே வழங்க வேண்டும். கேங்மேன் பதவியை கள உதவியாள ராக மாற்ற வேண்டும். 1.12.2023 முதல் வழங்க வேண்டிய ஊதிய உயர்வு மற்றும் வேலை பேச்சு வார்த்தையை உடனே துவங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதேபோன்று மன்னார்புரம், புள்ளம்பாடி, வெள்ளனூர், துறையூர், மணிகண்டம், மணப் பாறை, திருவெறும்பூர் உட்பட 47 பிரிவு அலுவ லகங்களில் ஒலி முழக்கப் போராட்டம் நடை பெற்றது. பெரம்பலூர் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியு) பெரம்பலூர் வட்டக்கிளை சார்பில் கோரிக்கை அடங்கிய அட்டையுடன் கவன ஈர்ப்பு முழக்கம் புதனன்று மின்வாரிய செயற்பொறியா ளர் அலுவலகம் முன்பு நடைபெற்றது. திருச்சி மண்டல செயலாளர் எஸ்.அகஸ்டின் தலைமை வகித்தார். வட்டச் செயலாளர் எம்.பன்னீர் செல்வம் முன்னிலை வகித்தார். குடவாசல் திருவாரூர் மாவட்டம் குடவாசலில் நடை பெற்ற கோரிக்கை தின ஆர்ப்பாட்டத்திற்கு அமைப்பின் குடவாசல் வட்டக்கிளை தலைவர் எஸ்.ஜெயச்சந்திரன் தலைமை வகித்தார். செயலாளர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார்.