மயிலாடுதுறை. ஜன.02- மயிலாடுதுறை அருகேயுள்ள மாப்படுகை யில் பாலர் பூங்கா சார்பில் புத்தாண்டை வர வேற்று “போதையில்லா சமூகத்தை உருவாக்கு வோம், காலநிலை மாற்றம் சுற்றுச்சூழல் பாதிப்பிலிருந்து மயிலாடுதுறையை மீட்டெ டுப்போம், நஞ்சில்லாத உணவை உறுதி செய்வோம்,சமத்துவ சமுதாயம் படைப்போம் என்கிற முழக்கங்களோடு பேரணி நடை பெற்றது. அண்ணா சிலை அருகில் துவங்கிய பேரணிக்கு பாலர்.பார்த்தசாரதி தலைமை வகித் தார். பேரணியை குடிமராமத்து கமிட்டி தலை வர் டி.எல்.ராஜேஷ்வரன் துவக்கி வைத்தார். 200 க்கும் மேற்பட்ட குழந்தைகள் விழிப்பு ணர்வு பதாகைகளை ஏந்திக்கொண்டு, முழக்கங்களை எழுப்பியவாறு பங்கேற்றனர். வாலிபர் சங்கத்தின் முன்னாள் மாவட்ட செய லாளர்.ஸ்டாலின், மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்டத்தலைவர் டி.கணேசன், சிஐடியு மாவட்ட செயலாளர் ப.மாரியப்பன், வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் அறிவழகன், பாலர் பூங்கா மாவட்ட கன்வீனர் அமுல்காஸ்ட்ரோ, ஆலோச கர் த.ராயர், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட செயலாளர் சி.மேகநாதன், மாவட்ட தலைவர் ஏ.ஆர்.விஜய், வாலிபர் சங்க முன்னாள் மாவட்ட துணை செயலாளர் டி.ஜி.ரவி, ஆசிரியர் சங்கம் சார்பில் த.லீலாவதி மற்றும் பல்வேறு அமைப்புகளின் பொறுப்பாளர்கள் பேரணியில் குழந்தைகளோடு பங்கேற்றனர்.நிறைவாக மாப்படுகை ரயில்வே கேட் அருகில் நிறைவடைந்தது. மூத்த வழக்கறிஞர் எம்.பி.எம் பாலு முடித்து வைத்து வாழ்த்திப் பேசினார்.