districts

img

மாத்தூர் ராமசாமிபுரத்தில் தேர் ஒடிந்து விழுந்து ஒருவர் பலி; 4 பேர் காயம்

அறந்தாங்கி, ஜூன் 24-  புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே அமைந்துள்ள மாத்தூர் ராமசாமிபுரத்தில் முத்து மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் தேரோட்டத் திருவிழா திங்களன்று மாலை நடைபெற இருந்த நிலையில், அதற்கான முன்னேற் பாடு பணிகள் மற்றும் தேரை அலங்கரிக்கும் பணிகள் திங்க ளன்று காலை முதல் நடைபெற்று வந்தன. தேரின் கும்பத்தை மேலே ஏற்றும் பணி நடைபெற்றுக் கொண்டி ருந்த போது, எதிர்பாராத விதமாக அதன் கயிறு அறுந்து  விழுந்தது. இதில், அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த மகாலிங்கம் என்பவர் உட்பட 5 பேர் படுகடுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்களை அக்கிராம மக்கள் மீட்டு,  தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அப்போது, மகாலிங்கம் செல்லும் வழியிலேயே உயிரி ழந்தார். மீதம் 4 பேருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்  பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.