திருவாரூர், ஜன.29 - திருவாரூர் மாவட்ட பள்ளிக் கல்வித் துறை சார்பாக, நூற்றாண்டு கடந்த குடவாசல் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நூற்றாண்டு விழா, இலக்கிய மன்ற நிறைவு விழா, விளையாட்டு போட்டி பரிசளிப்பு விழா என முப்பெரும் விழாக்கள் புதன்கிழமை நடைபெற்றன. நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ தலைமை வகித்து உரை யாற்றினார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் இரா.சௌந்தரராஜன் வர வேற்றார். நாகை நாடாளுமன்ற உறுப்பி னர் செல்வராஜ், திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கே.கலைவாணன், மஞ்சக்குடி சுவாமி தயானந்தா கலை- அறிவியல் கல்லூரி நிர்வாக அறங்கா வலர் ஷிலா பாலாஜி உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர். முன்னதாக இப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள், மஞ்சக்ககுடி சுவாமி தயானந்தா கல்லூரியின் தாளா ளர் எம்.ஜி.சீனிவாசன், ஒப்பந்தக்காரர் மூலங்குடி தினகரன், மருத்துவர் பால குமாரவேலு உள்ளிட்ட பலர் தங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொண்ட னர். தொடர்ந்து, வயலின் கச்சேரி, பரத நாட்டியம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சி களில் பங்கேற்ற மாணவர்களை பாராட் டியும், பள்ளியில் கட்டுரை, கவிதை, இலக்கிய போட்டியில் பங்கேற்ற மாண வர்களை பாராட்டி, பரிசு-கேடயம் வழங்கப்பட்டது. பள்ளி முதல்வர் ர.ஜெயவேல் நன்றி கூறினார். நிகழ்வில் மாவட்ட கல்வி அலுவ லர் தி.ராஜேஸ்வரி, பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் தலைவர்கள் பா.பிரபா கரன், ஆர்.முருகேசன், குடவாசல் ஸ்ரீமகாதேவ குருஜி வித்யாலயா, மெட்ரி குலேஷன் மேல்நிலைப் பள்ளி தாளா ளர் எம்.டி.பாணி மற்றும் பள்ளி மேலாண் மைக் குழு தலைவர்கள், உறுப்பி னர்கள், பெற்றோர்-ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.