மயிலாடுதுறை,மார்ச் 7- மயிலாடுதுறை மாவட் டம் முழுவதும் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாத்திட, மத நல்லி ணக்கத்தை சீர்குலைப்பதை தடுத்திட, இந்தியா அமைதி பூங்காவாக தொடர்ந்திட வலியுறுத்தி 2 நாள் பிரச்சார இயக்கம் நடைபெற்றது. இந்தப் பிரச்சார இயக்கம் புதனன்று மாலை நிறை வடைந்தது. மயிலாடுதுறை கிட் டப்பா அங்காடி அருகே துவங்கிய பிரச்சார கூட்டத் தில், அனைத்து சமய நிலங்க ளை பயன்படுத்துவோர் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.ஆர்.விஜய், வாலிபர் சங்க முன்னாள் மாவட்ட துணைச் செயலாளர் டி.ஜி.ரவி, சிறு வியாபாரிகள் சங்க மாவட்டச் செயலாளர் டி. துரைக்கண்ணு ஆகியோர் வாழ்த்திப் பேசினர். நீடூர், கற்கோயில், புங்க னூர், வைத்தீஸ்வரன் கோயில், சீர்காழி, மங்கை மடம், பெருந்தோட்டம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்ற பிரச்சார இயக்கம் திரு முல்லைவாசலில் நிறை வடைந்தது. நிறைவு பிரச்சார தெரு முனைக் கூட்டத்திற்கு மாவட்ட துணைச் செயலா ளர் எம்.செல்லப்பா தலை மை வகித்தார். அமைப்பின் மாநிலக்குழு உறுப்பினர் ஷேக் சலாவுதீன் விளக்க உரையாற்றினார். மாவட்டச் செயலாளர் கே.பி.மார்க்ஸ், சி.வி.ஆர் ஜீவானந்தம் மற்றும் அமைப்பின் மாவட்ட நிர்வாகிகள் உரை யாற்றினர்.