அடிக்கல் நாட்டு விழா
பாபநாசம், ஜூன் 10- தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை அருகே கோவிந்த நாட்டுச்சேரி ஊராட்சி, பட்டுக்குடி காளியம்மன் கோவில் தெருவில், ஏஜிஏஎம்டி திட்டத்தின்கீழ் ரூ.16. 50 லட்சம் மதிப்பீட்டில் புதி தாக அங்கன்வாடி கட்டி டம் கட்டப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழாவிற்கு ஊராட்சித் தலைவர் ஜெய் சங்கர் தலைமை வகித் தார். இதில் துணைத் தலைவர் இந்திரா காந்தி, ஊராட்சி உறுப்பினர்கள், ஊராட்சி செயலர் முரு கையன், அங்கன்வாடி பணியாளர்கள், கிராம நாட்டாண்மைகள் மற்றும் மக்கள் பங்கேற்றனர்.
திருநங்கையருக்கு நலத்திட்ட உதவிகள்: ஜூன் 21-இல் முகாம்
தஞ்சாவூர், ஜூன் 10- தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம் மாவட்ட சமூக நல அலுவலகம் சார்பில், திருநங்கையருக்கு ஒரே இடத்தில், பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்க ஏதுவாக, பல் வேறு துறைகள் ஒருங்கி ணைந்து ஜூன் 21 அன்று தஞ்சாவூர் மாவட்ட ஆட்சி யர் அலுவலக மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்ட அரங்கத்தில் முகாம் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இம்முகாமில், அடை யாள அட்டை வழங்கு தல், ஆதார் அட்டையில் திருத்தம், வாக்காளர் அட்டை, முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டம், ஆயுஷ்மான் பாரத் அட்டை பெற்று வழங்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இதற்கான கூடுதல் விவ ரங்களை அறை எண். 303, 3-ஆவது தளம், மாவட்ட சமூக நல அலு வலகம், மாவட்ட ஆட்சி யர் அலுவலக வளாகம், தஞ்சாவூர் என்ற முகவரி யில் பெற்றுக் கொள்ள லாம் என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தெரிவித்து உள்ளார்.
கஞ்சா வியாபாரி கைது 17 கிலோ கஞ்சா பறிமுதல்
தஞ்சாவூர், ஜூன் 10- தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு காவல் ஆய் வாளர் வி.சந்திராவுக்கு கிடைத்த ரகசிய தகவ லின்படி, பருத்திக் கோட்டை நெல்லுக்கடை பேருந்து நிறுத்தத்துக்கு சென்றார். அங்கு இரண்டு டிராவல் பேக்கு களை வைத்துக் கொண்டு நின்றவரிடம் சோதனை செய்த போது, அதில் ரூ.1.75 லட்சம் மதிப்புள்ள 17 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து விசாரித்தபோது, அவர் தேனி மாவட்டம் ஆண்டி பட்டி தாலுகா தும்மங்குண்டு மெயின் ரோட்டைச் சேர்ந்த ஆர்.கணேசன் (60) என்பதும், அங்கிருந்து கஞ்சாவை துணிகளில் சுற்றி டிராவல் பேக்கில் வைத்துக் கொண்டு, பேருந்து மூலம் ஒரத்த நாடு பகுதிக்கு கொண்டு வந்ததும், பின்னர் இங்குள்ளவர்களிடம் விற்க முயன்றதும் தெரிய வந்தது. அதையடுத்து கணே சனை ஒரத்தநாடு காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
நாளை வருமான வரித்துறை விழிப்புணர்வு கூட்டம்
பெரம்பலூர்-அரியலூர் வணிகர்கள், மக்களுக்கு அழைப்பு
பெரம்பலூர், ஜூன் 10 - வருமான வரித்துறை சார்பில் ஒன்றிய நேரடி வரிகள் வாரியம் எடுத்துள்ள புதிய முயற்சிகள், மற்றும் இணைய வழி (டிஜிட்டல்) செயல்பாடு கள், வரி செலுத்துவதில் ஏற்பட்டுள்ள மேம்பாடு, மற்றும் வரி செலுத்துவோ ரின் பங்கு, கடமைகள் குறித்த விழிப்பு ணர்வு கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டம் ஜூன் 12 (புதன்கிழமை) அன்று மாலை 4 மணியளவில் பெரம்ப லூர் புதிய பேருந்து நிலையம் அருகி லுள்ள அஸ்வின்ஸ் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. இதில் திருச்சி வரு மான வரித்துறை துணை ஆணையர் கே.கருப்பசாமி பாண்டியன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள், வருமான வரி செலுத்துதல், தொடர்புடைய சந்தே கங்கள் மற்றும் பிரச்சனைகளுக்கு விளக்கம் அளிக்க உள்ளனர். பெரம்பலூர் வருமான வரி சரகத்துக் குட்பட்ட பெரம்பலூர், அரியலூர் ஆகிய 2 மாவட்ட பகுதிகளைச் சேர்ந்த வரி செலுத்துவோர், வணிகர்கள், பட்டயக் கணக்காளர்கள், வரி ஆலோ சகர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு பயன்பெற வருமான வரித்துறை சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மின்சாரம் தாக்கி இறந்தவர் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் நிதி
தஞ்சாவூர், ஜூன் 10- தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 257 மனுக்களை பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கி னர். தொடர்ந்து முதலமைச்சரின் பொது நிவாரண நிதியி லிருந்து மின்சாரம் தாக்கி இறந்த நபரின் குடும்பத்தினருக்கு ரூ.1,00,000-க்கான காசோலையும், மாநில பேரிடர் நிவா ரண நிதியிலிருந்து தீ விபத்தில் இறந்த, பாபநாசம் வட்டம் பசுபதி கோயில் கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் என்பவரின் குடும்பத்தினருக்கு ரூ.4,00,000-க்கான காசோலையும், மாவட்ட ஆட்சியரின் தன் விருப்ப நிதியிலிருந்து மலர்ஜோதி என்பவர் நுரையீரல் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவரது தொடர் சிகிச்சை பயன்பாட்டிற்காக ஆக்ஸிஜன் செறிவூட்டி யினையும், மாற்றுத்திறனாளி நலத்துறையின் சார்பில் ரூ.1,76,000 மதிப்பிலான செயற்கை கால் ஒரு மாணவனுக் கும், சக்கர நாற்காலி ஒரு நபருக்கும், காதொலிக் கருவி ஒரு நபருக்கும் என மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
குறைதீர் கூட்டத்தில் பொதுமக்கள் மனு அளிப்பு
மயிலாடுதுறை, ஜூன் 10- மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட வருவாய் அலு வலர் மு.மணிமேகலை தலைமையில் நடைபெற்றது. மாவட்டத் தின் பல்வேறு கிராமங்களில் இருந்து பொதுமக்கள் வந்து மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனுக்களை அளித்தனர். இக்கூட்டத்தில், இலவச வீட்டுமனை பட்டா மற்றும் பட்டா மாறுதல் கோரி 38 மனுக்களும், வேலைவாய்ப்பு கோரி 13 மனுக்களும், முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் விதவை உதவித்தொகை கோரி 26 மனுக்களும், புகார் தொடர்பான மனுக்கள் 41, மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, வங்கிக்கடன், மாற்றுத்திறனாளி உபகரணங்கள் கோரி 13 மனுக்களும், அடிப்படை வசதி கோரி 22 மனுக்களும், நிலஅபகரிப்பு தொடர் பாக 11 மனுக்களும், கலைஞர் உரிமைத்தொகை வேண்டி 09 மனுக்களும், தொழிற்கடன் வழங்க கோரி 12 மனுக்களும் என மொத்தம் 185 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை மாவட்ட வருவாய் அலுவலர், சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
ஜூன் 13 முதல் 21 வரை கும்பகோணத்தில் ஜமாபந்தி
கும்பகோணம், ஜூன் 10- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வட்டத்தில் 2024 ஆம் ஆண்டு 1433-பசலிக்கான வருவாய் தீர்வாய கணக்கு தணிக்கை (ஜமாபந்தி), கும்பகோணம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜூன் 13 முதல் 21 ஆம் தேதி வரை காலை 9 மணிக்கு தொடங்கி தினமும் மேற் கொள்ளப்பட உள்ளது. இதில் கும்பகோணம் வட்டத்திற்குட்பட்ட கிராமங்க ளான தேவனாஞ்சேரியில் ஜூன் 13, முருக்கங்குடியில் ஜூன் 14, நாச்சியார்கோவிலில் ஜூன் 18, சோழன் மாளி கையில் ஜூன் 20, கும்பகோணத்தில் ஜூன் 21 ஆகிய தேதிகளில் மேற்படி வருவாய் தீர்வாய கணக்கு தணிக்கை தினங்களில், அந்தந்த கிராமத்தைச் சேர்ந்த பொது மக்கள் தங்கள் கோரிக்கை குறித்து மனுக்களை அளித்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பட்டுக்கோட்டை அஞ்சல் கோட்டத்தில் ஆதார் சிறப்பு சேவை முகாம்
பட்டுக்கோட்டை, ஜூன் 10- தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அஞ்சல் கோட்டத் தில் ஆதார் சிறப்பு சேவை முகாம் நடைபெற்று வருகிறது என அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் கஜேந்திரன் தெரி வித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “பட்டுக்கோட்டை அஞ்சல் கோட்டத்தில் உள்ள 26 ஆதார் சேவை மையங்களில் ஆதார் சிறப்பு சேவை முகாம் கடந்த ஜூன் 5 அன்று தொடங்கியது. இந்த முகாம் ஜூலை 5 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் ஆதார் புதிதாக எடுக்க கட்டணம் இல்லை. இதற்கு குழந்தையின் அசல் பிறப்பு சான்றிதழ், பெற்றோரின் ஆதார் அட்டை உள்ளிட்டவற்றை கொண்டு வர வேண்டும். பெயர் மாற்றம், பிறந்த தேதி மாற்றம், முகவரி மாற்றம் செய்ய ரூ.50, புகைப்படம் மற்றும் கைரேகை மாற்ற ரூ.100 கட்டணம் வசூலிக்கப்படும். பெயர் மாற்றம் செய்ய பாஸ்போர்ட், பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, புகைப்படத்துடன் கூடிய திருமண சான்றிதழ், புகைப்படத்து டன் பென்ஷன் கார்டு, புகைப்படத்துடன் சாதிச் சான்றிதழ் கொண்டு வர வேண்டும். பிறந்த தேதி மாற்றம் செய்ய பிறப்பு சான்றிதழ், பாஸ்போர்ட், மதிப்பெண் சான்றிதழ், முகவரி மாற்றம் செய்ய பாஸ்போர்ட், அஞ்சல் நிலைய அடையாள அட்டை, வங்கி கணக்கு புத்தகம், வாக்காளர் அடையாள அட்டை, ஆயுள் காப்பீட்டு சான்றிதழ், 3 மாதங்களுக்கு உட்பட்ட மின் கட்டண ரசீது, குடிநீர் வரி ரசீது உள்ளிட்ட ஆவணங்களில் ஏதா வது ஒன்றைக் கொண்டு வர வேண்டும்” என கூறப் பட்டுள்ளது.
சூரியமூர்த்தி நகர் வடக்குப் பகுதியில் குடியிருப்போருக்கு பட்டா வழங்குக! நலச் சங்க கூட்டம் வலியுறுத்தல்
அறந்தாங்கி, ஜூன் 10 - புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சூரியமூர்த்தி குளம் வடக்குப் பகுதியில் குடியிருப்போர் நலச் சங்கம் கூட்டம் ஞாயிறன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு வழக்கறிஞர் சங்க மாவட்டச் செயலாளர் அலாவுதீன் தலைமை வகித்தார். கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. கணேசன் தலைவராக வும், ராஜேஷ் செயலாளராகவும், ரவி பொருளாளராகவும், பரமசிவம், இந்திரா, மஞ்சு, மகேஸ்வரி ஆகியோர் நிர்வாக குழு உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்தப் பகுதி நத்தம் புறம்போக்கு என்று வகைப்பாடு செய்யப்பட்டிருந்தும், இதுவரை பட்டா வழங்கவில்லை. எனவே நீண்ட நாட்களாக இப்பகுதியில் குடியிருப்போருக்கு உடனே பட்டா வழங்க வேண்டும். இந்தப் பகுதியில் குப்பைத் தொட்டி வைக்க வேண்டும். தெரு விளக்குகளை சரி செய்து தர வேண்டும். தீயணைப்பு நிலையத்திற்கு வடக்கு பகுதி யில் சாலை அமைக்க வேண்டும். இங்கு மழை நீர் வடிகால் வாய்க்கால் அமைத்து தர வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் சிறப்புரையாற்றினார். தாலுகா செயலாளர் நாராயண மூர்த்தி, மாவட்டக் குழு உறுப்பினர் தென்றல் கருப் பையா, சிஐடியு ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் கர்ணா, சிபிஎம் நகரச் செயலாளர் கணேசன், வாலிபர் சங்க ஒன்றியப் பொரு ளாளர் சங்கர் உள்ளிட்டோர் பேசினர்.
பேராவூரணி அரசு கல்லூரியில் முதல்கட்ட சேர்க்கை கலந்தாய்வு
தஞ்சாவூர், ஜூன் 10- பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூ ரியில், முதல் கட்ட மாணவர் சேர்க்கை கலந்தாய்வு திங்கள்கிழமை நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில் அரசு மற்றும் கலை அறிவியல் கல்லூரி முடச்சிக்காடு பகுதியில் சொந்த கட்டிடத்தில் 2016 ஆம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. இந்நிலையில், முதலாவது ஆண்டு மாணவர்கள் சேர்க்கை முதல்கட்ட கலந்தாய்வு திங்கள்கிழமை தொடங்கியது. இதில், கல்லூரி முதல்வர் முனைவர் இரா.திருமலைச் சாமி தலைமை வகித்துப் பேசினார். கல்லூரியில் முதலாம் ஆண்டு இளநிலை பட்டப் படிப்பில் சேர 4,523 மாணவ, மாண விகள் ஆன்-லைன் மூலம் விண்ணப்பித்து இருந்தனர். திங்கள்கிழமை நடைபெற்ற முதல் கட்ட கலந்தாய்வில் பி.காம், பி.பி.ஏ, பி.ஏ (தமிழ்), பி.ஏ (ஆங்கிலம்) ஆகிய பாடப் பிரிவுகளுக்கு நடைபெற்றது. ஜூன் 11 (செவ்வாய்க்கிழமை) பி.எஸ்சி கணிதம், இயற்பியல், வேதியியல், கணினி அறிவி யல், பி.ஏ தமிழ், பி.ஏ.ஆங்கிலம் ஆகிய பாடப் பிரிவுகளுக்கு கலந்தாய்வு நடைபெறும். அரசு விதிமுறைகளின்படி மதிப்பெண்கள் மற்றும் இன சுழற்சி அடிப்படையில் கலந்தாய்வு நடைபெறும். விண்ணப் பித்துள்ள தகுதியுடைய அனைவருக்கும் சேர்க்கை கிடைக்கும். முதலாம் ஆண்டு வகுப்புகள் ஜூலை 3 ஆம் தேதி தொடங்கும். 2, 3 ஆம் ஆண்டு வகுப்புகள் ஜூன் 19-இல் தொடங்கும் என உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது என கல்லூரி முதல்வர் இரா.திருமலைச்சாமி தெரிவித்தார். திங்கள்கிழமை நடைபெற்ற கலந்தாய்வில் 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
மணமேல்குடி அரசுப் பள்ளியில் மாணவர்களுக்கு ஆதார் பதிவு
அறந்தாங்கி, ஜூன் 10 - புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு பள்ளியி லேயே ஆதார் பதிவு செய்தல் நிகழ்வு தலைமையாசிரியர் ஜீவா னந்தம் தலைமையில் நடைபெற்றது. மணமேல்குடி வட்டார கல்வி அலுவலர் செழியன் மற்றும் மணமேல்குடி வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொ) சிவயோகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்வில் அரசு பள்ளிகளில் ஆதார் பதிவு செய்தல் மற்றும் புதுப்பித் தல் அனைத்து குழந்தைகளுக்கும் இலவசமாக வழங்கப் படும். ஆதார் பணி மேற்கொள்ளும் போது தனியார் மற்றும் சுயநிதி பள்ளிகளில் பயிலும் ஆறு மற்றும் ஏழு வயது உள்ள குழந்தைகளுக்கும், 16 மற்றும் 17 வயதுடைய குழந்தை களுக்கும் இலவசமாக இச்சேவை வழங்கப்படும். 6 வயது முதல் 15 வயதுடைய குழந்தைகளுக்கு புதுப்பித்தல் மேற்கொள்வதற்கு இந்திய தனித்துவ அடையாள ஆணை யம் நிர்ணயித்துள்ள கட்டணத்தை செலுத்தி, தனியார் மற்றும் சுயநிதி பள்ளிகள் இச்சேவையை பெற்றுக் கொள்ள லாம் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம் தொடர்ந்து ஒவ்வொரு பள்ளியாகச் சென்று ஆதார் புதுப்பித்தல் மற்றும் பதிவு செய்தல் பணிகள் மேற்கொள்ளப் படும்.
கோமாரி நோய்க்கு தடுப்பூசி மட்டுமே ஒரே தீர்வு
தஞ்சை ஆட்சியர் தகவல் தஞ்சாவூர், ஜூன் 10 - தஞ்சாவூர் அருகே, திருமலைசமுத்திரம் ஊராட்சி யில் கால்நடைப் பராமரிப்பு துறை சார்பில், கால்நடை களுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் பணி யினை, திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகரன் முன்னிலையில், மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தலைமை வகித்து திங்கள்கிழமை துவக்கி வைத்தார். கோமாரி நோய் தடுப்பு முகாமில் ஏராளமான கால்நடைகளுக்கு தடுப்பூசி அளிக்கப்பட்டது. பின்னர் மாவட்ட ஆட்சியர் தெரிவிக்கையில், கால்நடைகளில் ஏற்படும் கோமாரி நோய் ஒருவகை வைரஸ் நச்சுக் கிருமியால் ஏற்படும் கொடிய நோயாகும். இந்த வகை நோய்க்கு சிகிச்சை கிடையாது. தடுப்பூசி மட்டுமே ஒரே மருந்தாகும். இந்த நோய் பாதிப்பு ஏற்பட்டால் கறவை மாடுகளில் பால் உற்பத்தி குறைவதுடன், சினைப் பிடிப்ப தில் தாமதம் ஏற்படும். மேலும் இளைப்பு ஏற்படுவதால் எருதுகளில் வேலைத்திறன் குறைகிறது. இளங்கன்றுகளுக்கு இந்நோய் ஏற்படின் 100 சதவீதம் இறந்து விடும். ஆகையால் இந்நோய் வரா மல் தடுப்பதற்கு தடுப்பூசி அளிப்பதே சிறந்தது. இப்பணி யானது பொதுமக்களின் ஒத்துழைப்புடன் நடந்தால் மட்டுமே கோமாரி நோயினை நூறு சதவீதம் முற்றிலும் ஒழிக்க முடியும். கோமாரி நோய்த் தடுப்பூசி ஜூன் 10 முதல் ஜூலை 1 ஆம் தேதி வரை தொடர்ந்து மூன்று வாரங்களுக்கு, உள்ளாட்சி மற்றும் வருவாய்த் துறை ஒத்துழைப்புடன் கால்நடைப் பராமரிப்புத் துறையினரால் நடத்தப்பட உள்ளது. இத்தடுப்பூசிப் பணிக்கான உத்தேச செயல்திட்ட அட்டவணை ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ளது. விடுபட்ட கால்நடைகளுக்கு ஜூலை 10 வரை தடுப்பூசி செலுத்தப்படும். தடுப்பூசி அளிக்கப்படும் இடம், நாள், நேரம் குறித்த விவரங்கள் அனைத்து ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கும் தெரிவிக்கப்படும். இத்தடுப்பூசி பணி அனைத்து மக்களை சென்றடை யும் வகையில் அனைத்து ஊராட்சி மன்றத் தலைவர்களும் தங்களது ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் ஒலிபெருக்கி விளம்பரம் மற்றும் விளம்பர நோட்டீஸ் வாயிலாக கோமாரி நோயினை பற்றியும், தடுப்பூசியின் முக்கியத் துவம் பற்றியும் விளக்கமளிக்க வேண்டும் என்றார்.