எல்ஐசி ஊழியர் சங்க தஞ்சை கோட்ட முன்னாள் துணைத் தலைவர் வி.கணேசன்- உஷா கணேஷ் இல்ல திருமண வரவேற்பு மற்றும் திருமண விழா பிப்.1,2 ஆகிய தேதிகளில் கரூர்-கோவை சாலையில் உள்ள கொங்கு திருமண மண்டபத்தில் நடைபெற்றது. திருமண விழாவிற்கு சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் க.சுவாமிநாதன், மூத்த தலைவர்கள் என்.சீனிவாசன், ஜி.ரத்தினவேலு ஆகியோர் தலைமை வகித்தனர். கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.பாலபாரதி, மாவட்டச் செயலாளர் மா.ஜோதிபாசு, சிஐடியு மாவட்டத் தலைவர் ஜி.ஜீவானந்தம், எல்ஐசி ஊழியர் சங்க அகில இந்திய இணை செயலாளர் எம்.கிரிஜா, மண்டல செயலாளர் கோபிநாத், கரூர் மாநகர செயலாளர் எம்.தண்டபாணி, சிஐடியு மாவட்டச் செயலாளர் சி.முருகேசன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் பலர் மணமக்களை வாழ்த்தினர். இதில், சிபிஎம் அகில இந்திய மாநாட்டு நிதியாக ரூ.10 ஆயிரமும், சிஐடியு நிர்மல் பள்ளி நிதியாக ரூ.5 ஆயிரம் என மொத்தம் ரூ.15 ஆயிரத்தை கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.பாலபாரதியிடம் மணமக்கள் வி.ஜி.கிருத்திகா-எம்.ராஜேஷ்குமார் ஆகியோர் வழங்கினர்.