districts

img

மருதுபாண்டியர் கல்வி நிறுவனத்தில் நூல் வெளியீட்டு விழா

தஞ்சாவூர், ஜன.21 -  தஞ்சை மருதுபாண்டியர் கல்வி நிறுவனத்தில், பேராசிரியர் அ.அப்துல் ரஹ்மான் எழுதிய (ECO-BIOLOGY OF TURTLES) நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. மருதுபாண்டியர் கல்வி நிறுவனங்களின் தலைவர் கொ.மருதுபாண்டியன் தலைமை வகித்தார்.  தஞ்சை தொகுதி, நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி நூலை வெளியிட்டு உரையாற்றினார். திருவை யாறு சட்டமன்ற உறுப்பினர் துரை. சந்திரசேகரன், முதல் பிரதியை பெற்றுக் கொண்டார். நூலாசிரியர் பேராசிரியர் அ.அப்துல் ரஹ்மான் ஏற்புரையாற்றினார். நிகழ்வில் கல்லூரி முதல்வர் மா.விஜயா, கல்வியியல் கல்லூரி முதல்வர் ப.சுப்பிரமணியன் வாழ்த்திப் பேசினர்.  முன்னதாக துணை முதல்வர் ரா.தங்கராஜ் வர வேற்றார். தமிழ்த்துறைத் தலைவர் வீ.வெற்றிவேல் நன்றி கூறினார்.