districts

img

மக்கள் தொடர்பு திட்ட முகாம்

பெரம்பலூர், மே 27-   பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டத்திற்குட்பட்ட, பில்லங்குளம் கிராமத்தில் மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தலைமையில், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம. பிரபாகரன் முன்னிலையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பல்வேறு துறைகளின் சார்பில், மொத்தம் 171 பயனாளிகளுக்கு ரூ.2,29,81,205 மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். தொடர்ந்து, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.  முன்னதாக அரசின் திட்டங்களை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் பல்வேறு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டு, பொதுமக்களுக்கு அரசின் திட்டங்கள் குறித்து எடுத்துரைக்க அறிவுறுத்தினார்.