districts

img

அணையில் தண்ணீர் வரத்து அதிகரிப்பால் களக்காடு தலையணையில் குளிக்கத் தடை

திருநெல்வேலி, மார்ச் 2-  அணையில் தண்ணீர் வரத்து அதிகரிப்பால்  களக்காடு தலையணையில் குளிக்க  தடை விதிக்கப்பட்டுள்ளது. களக்காடு  மலைப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக களக்காடு தலையணையில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.இதனால் களக்காடு சரணாலய துணை இயக்குனர்- வனஉயிரின காப்பாளரின் உத்தரவால் மார்ச்  3 ஆம் தேதி  முதல் மறு உத்தரவு வரும் வரை சுற்றுலா பயணிகள் தலையணையில் குளிக்க தடை விதித்தும் பார்வையிட மட்டும் அனுமதி வழங்கப்படுகிறது. இத்தக வலை களக்காடு வனச்சரக  அலுவலர் தெரி வித்துள்ளார்.