சின்னாளபட்டி, நவ.25- திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரம் ஒன்றியம், கன்னிவாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு புகையிலை மற்றும் போதை பழக்கத்தினால் ஏற்படும் தீமைகள் மற்றும் சட்டம் குறித்து விழிப்புணர்வு முகாம் பேரூராட்சி மன்றத் தலைவர் தன லட்சுமி சண்முகம் தலைமையில் நடைபெற்றது. சுகாதார ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன், ஆல் தி சில்ட்ரன் ஒருங்கிணைப்பாளர் சைமன் ராஜா ஆகி யோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் ராமன் வரவேற்று பேசினார். மாணவர்கள் மத்தியில் பேசிய கன்னிவாடி காவல்நிலைய சார்பு ஆய்வாளர் கணேசன் போதைப் பழக்கம் இல்லாத மாணவனால் தான் உயர்நிலையை அடைய முடியும். உடல் ஆரோக்கியம் மட்டுமின்றி மனதள விலும் பாதிப்பு வராமல் இருக்க போதை பழக்கத்தை கைவிட வேண்டும், போதை பழக்கம் இல்லாத மாணவர் சமுதாயம் உருவாக வேண்டும் என மாணவர்கள் மத்தியில் பேசியதோடு மாணவர்களுக்கு புகையிலை மற்றும் போதை பழக்கத்தினால் ஏற்படும் தீமைகள் மற்றும் சட்டம் பற்றிய விழிப்புணர்வு வழங்கினார். நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைமை எழுத்தர் வெள்ளை யன், துப்புரவு மேற்பார்வையாளர் அகில்ராஜ் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.