districts

img

வீராங்கனை வினேஷ் போகத்துக்கு வெள்ளிப் பதக்கம் வழங்கிடுக!

புதுக்கோட்டை/மயிலாடுதுறை, ஆக.11 - இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் பாரீஸ் ஒலிம்பிக்கில் இருந்து தகுதி நீக்கம் செய்யப் பட்டதைக் கண்டித்தும், அவருக்கு வெள்ளிப் பதக்கம் வழங்கிட வலி யுறுத்தியும் இந்திய ஜனநாயக வாலி பர் சங்கம் சார்பில் புதுக்கோட்டையில் சனிக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா  அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு வாலிபர் சங்க நகரச் செய லாளர் தீபக் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் ஆர்.மகாதீர், இந்திய மாணவர் சங்க மாவட்டச் செய லாளர் எஸ்.ஜனார்த்தனன், மாநில  செயற்குழு உறுப்பினர் கார்த்திகா தேவி, வாலிபர் சங்க மாவட்டக் குழு  உறுப்பினர்கள் தமிழ், அருண் உள்ளிட் டோர் கண்டன உரையாற்றினார். மயிலாடுதுறை மயிலாடுதுறை, மங்கைநல்லூர், சீர்காழி ஆகிய பகுதிகளில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி அருகே நடைபெற்ற போராட்டத்திற்கு வட்ட தலைவர் ஜெகதீஸ்வரன் தலைமை வகித்தார். மாவட்டச் செய லாளர் அறிவழகன், வட்டச் செயலா ளர் குமரேசன், பொருளாளர் விஜய காந்த் உள்ளிட்டோர் கண்டன உரை யாற்றினர். மங்கைநல்லூர் கடைவீதியில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வாலிபர் சங்கத்தின் குத்தாலம் ஒன்றியச் செய லாளர் ஸ்டாலின் தலைமை வகித்தார்.  மாவட்டச் செயலாளர் அறிவழகன் மாவட்ட குழு உறுப்பினர் வெற்றி  உள்ளிட்டோர் கண்டன உரையாற்றி னர். சீர்காழி பழைய பேருந்து நிலை யத்தின் அருகே ஒன்றியச் செயலாளர் டி.வி.குமார் தலைமையில் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது.