districts

img

திருச்சி விமான நிலையத்தில் ஆட்டோக்களை அனுமதிக்க வேண்டும் துரை வைகோ எம்.பி. பேட்டி

திருச்சிராப்பள்ளி, ஆக.20- திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் திருச்சி எம்.பி துரை வைகோ செய்தியாளர்களிடம் கூறுகையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், விமான நிலைய இயக்குநர் கோ பாலகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகளுட னான ஆலோசனை கூட்டம் திங்க ளன்று நடத்தப்பட்டது.

இக்கூட்டத்தில் திருச்சி விமான நிலைய ஓடுதள பாதை விரிவாக்கம் குறித்தும், பயணிகளுக்கு செய்ய வேண்டிய வசதிகள் குறித்தும் கலந்து ரையாடப்பட்டது. திருச்சி விமான நிலை யத்தில் புதிய முனையம் கட்டப்பட்டு  விட்டது. ஆனால் ஓடுதள பாதை இன்னும் விரிவுபடுத்தப்படவில்லை.ஓடுதள பாதையை விரிவுப்படுத்தி னால் தான் கூடுதல் விமானங்கள் இயக் கப்பட முடியும், பயணிகள் எண் ணிக்கை அதிகரிக்கும். 

எனவே ஓடுதள பாதைக்கான நிலத்தை கையகப்படுத்துவது குறித் தும் விவாதிக்கப்பட்டது. விமான நிலைய புதிய முனையத்தில் விமான  பயணிகளுடன் வருபவர்கள் பயன்படுத்த  கழிவறை வசதி போதுமான வகை யில் இல்லை. அதை அமைத்து தர  வேண்டும் என்பது குறித்தும் கூறினேன்.  இந்தியாவில் உள்ள எந்த விமான நிலை யத்திலும் பாதுகாப்பு காரணங்களுக் காக ஆட்டோக்கள் அனுமதிக்கப்படு வதில்லை. எனவே பயணிகள் மற்றும் பயணிகளுடன் வருபவர்களின் வசதிக் காக தற்பொழுது பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. திங்களன்று மூன்று அரசு பேருந்துகள் சேவை தொ டங்கப்பட்டுள்ளது. வரும் காலத்தில் பய ணிகள் பயன்பாட்டிற்கு ஏற்ப அதன் எண்ணிக்கை அதிகரிப்பது குறித்து ஆலோசிக்கப்படும். திருச்சி விமான நிலையத்தில் பயணிகளை இறக்கி விட வாவது ஆட்டோக்களை அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள் ளேன். இது குறித்து பரிசீலிப்பதாக விமான நிலைய அலுவலர்கள் தெரி வித்துள்ளனர் என்றார்.