தஞ்சாவூர், ஜூன் 8-
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வரு வாய் வட்டாட்சியர் அலுவலகத்தின் மேல் மாடியில், நீண்ட காலமாக ஆதார் சேவை மையம் செயல்பட்டு வந்தது. இந்நிலை யில், கடந்த 7 மாதங்களுக்கு முன்பு திடீ ரென ஆதார் சேவை மையம் மூடப்பட்டது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி யடைந்து வந்தனர்.
தங்களுக்கு தேவையான ஆதார் அட்டை புதிதாக எடுக்கவும், திருத்தம் செய் யவும் பட்டுக்கோட்டைக்கு செல்ல வேண் டிய நிலை இருந்தது. இந்நிலையில், பேரா வூரணி அஞ்சல் அலுவலகத்தில் ஆதார் சேவை மையம் தொடங்கப்பட்டு செயல் படுத்தப்பட்டது. இதனால் பொதுமக்கள் சற்று நிம்மதி அடைந்தனர்.
அதே நேரத்தில் ஒரே நாளில் நூற்றுக் கும் மேற்பட்டோர் அஞ்சல் அலுவலகத்தில் குவிந்ததாலும், குறிப்பிட்ட எண்ணிக்கை யிலான நபர்களுக்கு மட்டுமே டோக்கன் வழங்கப்பட்டதாலும், பலரும் ஏமாற்றம டைந்து திரும்பிச் செல்லும் நிலை ஏற் பட்டது. மேலும், அஞ்சல் அலுவலகத்தின் மாடியில் ஆதார் சேவை மையம் செயல் பட்டதால், முதியவர்கள், நோயாளிகள், மாற்றுத்திறனாளிகள் கடும் அவதிக்குள்ளா கியுள்ளனர்.
இந்நிலையில், பேராவூரணி வட்டாட்சி யர் அலுவலகத்தில் 7 மாதங்களுக்கு, பிறகு கடந்த ஜூன் 1 முதல் ஆதார் சேவை மையம் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ஆதார் சேவை மையம், தரைத் தளத்தில் வட்டாட்சியர் அலுவலக நுழைவு வாயில் இடது புறத்திலேயே அமைக்கப்பட் டுள்ளது. இதன் காரணமாக முதியவர்கள், நோயாளிகள், மாற்றுத் திறனாளிகள் மாடிக்கு செல்லும் சிரமம் தவிர்க்கப்பட்டு, தரைத்தளத்திலேயே ஆதார் சேவை வழங்கப்பட்டு வருகிறது.
பொதுமக்கள் தங்களுக்கு தேவை யான புதிய ஆதார் அட்டை எடுக்கவும், ஆதார் அட்டையில் திருத்தங்கள் செய்து கொள்ளவும் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள ஆதார் சேவை மையத்திற்கு, காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வந்து சேவையை பெற்றுக் கொள்ளலாம் என வருவாய்த்துறையினர் தெரிவித்துள்ள னர்.
இதே போல், வட்டாட்சியர் அலுவலக மேல் மாடியில் செயல்பட்டு வந்த இ-சேவை மையம், சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர் அலுவலகம் ஆகியவை, மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள், நோயாளிகள் கோரிக்கையை ஏற்று, தரைத்தளத்திலேயே இயங்க வட்டாட்சி யர் த.சுகுமார் ஏற்பாடு செய்துள்ளார். இதற்காக பல்வேறு தரப்பினரும் வட்டாட்சி யருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.