தஞ்சாவூர், ஜூலை 20- டெல்டா மாவட்டங்களில் ஆவின் பொருட்கள் விற்பனை முக வர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதுகுறித்து தஞ்சாவூர் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியம் பொது மேலாளர் (ஆவின் பொது மேலாளர்) வெளி யிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறி யிருப்பதாவது: தஞ்சாவூர் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத்திற்கு உட்பட்ட தஞ்சா வூர், திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மாவட் டங்களில் பால் விற்பனை நாளொன்றுக்கு சராசரியாக 59,500 லிட்டரும், பால் உபபொருட்கள் விற்பனை மாதம் ஒன்றுக்கு சராசரி யாக 84 லட்சம் ரூபாய் அளவில் விற் பனை செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் முகவர்கள் சுமார் 418 பேரும், மொத்த விற்பனையாளர்கள் சுமார் 57 பேரும், பாலக முகவர்கள் சுமார் 47 பேரும், இதர முகவர்கள் சுமார் 93 பேரும் என மொத்தம் 615 பேர் இவ் வொன்றிய முகவர்களாக செயல் பட்டு வருகின்றனர். இந்நிலையில் இவ்வொன்றியத் தின் மூலம் விற்பனை செய்யப்ப டும் ஐஸ்கிரீம் வகைகள், குல்பி, மில்க் சேக், பிளேவர்ட் மில்க், பாதாம் பவுடர், நெய் லட்டு, நெய் மைசூர்பா, குலோப்ஜாமுன், ரச குல்லா, பால்கோவா, நெய், வெண்ணெய், மில்க் பிஸ்கேட், குக்கீஸ், தயிர், மோர், லஸ்ஸி, யோகர்ட், சாக்லெட் மற்றும் இரு நூறுக்கும் மேற்பட்ட பால் உப பொருட்கள் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று குழந்தை கள் முதல் மூத்த குடிமக்கள் வரை விருப்பத்தோடு பயன்படுத்தி வரு கின்றனர். மேலும் ஆவின் பால் வகை களான சமன்படுத்தப்பட்ட பால், டிலைட் பால், நிலைப்படுத்தப்பட்ட பால் மற்றும் நிறை கொழுப்பு பால் போன்றவை தனியார் நிறுவ னங்களை காட்டிலும், ஆவின் பால் வகைகள் விலை மிகவும் குறை வாகவும், தரமாகவும் உள்ளன. அதோடு பால் உபபொருட்களும் பிற நிறுவனங்களைவிட விலை குறைவாகவும், தரத்தில் சிறந்த தாகவும் விளங்குகிறது.
அவ்வாறு இருக்கும் சூழ்நிலை யில் கீழ்க்காணும் பகுதிகளுக்கு ஆவின் முகவர்கள், மொத்த விற்ப னையாளர்கள் மற்றும் பாலக முக வர்கள் உடனடியாக தேவைப்படு கிறது. தஞ்சாவூர் மாவட்டம் - தஞ்சா வூர், கும்பகோணம், பாபநாசம், பட்டுக்கோட்டை, பேராவூரணி, ஒரத்தநாடு, திருவிடைமருதூர், திரு வையாறு, பூதலூர், ஆடுதுறை, வல்லம், அதிராம்பட்டினம், மதுக்கூர், சாலியமங்கலம், அய்யம்பேட்டை, திருக்காட்டுப்பள்ளி, செங்கிப் பட்டி, பூண்டி, நாச்சியார் கோவில். திருவாரூர் மாவட்டம் - திருவா ருர், குடவாசல், மன்னார்குடி, நன்னிலம், நீடாமங்கலம், கூத்தா நல்லூர், வலங்கைமான், திருத்து றைப்பூண்டி, கொரடாச்சேரி, ஆலங்குடி, முத்துப்பேட்டை. மயிலாடுதுறை மாவட்டம் - மயி லாடுதுறை, சீர்காழி, தரங்கம் பாடி, குத்தாலம், கொள்ளிடம், செம்பனார்கோவில், வைத்தீஸ் வரன் கோவில், நாகப்பட்டினம் மாவட்டம் - நாகப்பட்டினம், வேதா ரண்யம், கீழ்வேளூர், திருக்கு வளை, வேளாங்கண்ணி, திருப் பூண்டி, நாகூர், சிக்கல், ஆடு துறை, புதுச்சேரி, காரைக்கால், திரு நள்ளாறு. மேற்கண்ட பகுதிகளில் உள்ள பொதுமக்கள் ஆவின் முகவர்களா கவும், மொத்த விற்பனையாளர் களாகவும், பாலக முகவர்களா கவும் செயல்பட விரும்பும் நபர்கள் தஞ்சாவூர் மாவட்ட பால் உற்பத்தி யாளர்கள் கூட்டுறவு ஒன்றியத் திற்கு நேரில் வருகை தந்து தங்க ளுக்கு தேவையான விண்ணப்பத் தினை பூர்த்தி செய்து வழங்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.