ஆட்சியர் தகவல் கரூர், ஏப்.24 - சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற் றும் இளைஞர்களது பணியினை அங்கீ கரிக்கும் பொருட்டு முதலமைச்சர் மாநில இளைஞர் விருது ஒவ்வொரு ஆண்டும், சுதந்திர தினத்தன்று 15 வயது முதல் 3 வயது வரையுள்ள 3 ஆண்கள் மற்றும் 3 பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது ரூ.1,00,000/- ரொக்கம், பாராட்டுப் பத்திரம் மற்றும் பதக்கம் ஆகியவைகளை உள்ளடக்கி யது. இதுகுறித்து கரூர் மாவட்ட ஆட்சி யர் தங்கவேல் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 2024 ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர் மாநில இளைஞர் விருது 15.8.2024 அன்று நடைபெறும் சுதந்திர தின விழாவில் வழங்கப்பட உள்ளது. இவ்விருது பெற கீழ்க்காணும் தகுதி கள் வரையறுக்கப்பட்டுள்ளன. 15 வயது முதல் 35 வயது வரை யுள்ள ஆண்/பெண் ஆகியோர் விண்ணப் பிக்கலாம். 1.4.2023 அன்று 15 வயது நிரம்பியவராகவும், மார்ச் 31 அன்று 35 வயதுக்குள்ளாகவும் இருத்தல் வேண் டும். கடந்த நிதியாண்டில் (2023-2024) அதாவது 1.4.2023 முதல் 31.3.2024 வரை மேற்கொள்ளப்பட்ட சேவைகள் மட்டுமே கருத்தில் கொள்ளப்படும். விருதிற்கு விண்ணப்பிக்கும் முன்பு குறைந்தபட்சம் 5 வருடங்கள் தமிழகத் தில் குடியிருந்தவராக இருத்தல் வேண்டும். (அதற்கான சான்று இணைக் கப்பட வேண்டும்). விண்ணப்பதாரர் கள் சமுதாய நலனுக்காக தன்னார்வத் துடன் தொண்டாற்றியிருக்க வேண்டும். அவ்வாறு அவர்கள் செய்த தொண்டு கண்டறியப்படக் கூடியதாகவும், அளவி டக் கூடியதாகவும் இருத்தல் வேண்டும். ஒன்றிய-மாநில அரசுகள், பொதுத் துறை நிறுவனங்கள், பல்கலைக்கழ கங்கள், கல்லூரிகள் மற்றும் பள்ளி களில் பணியாற்றுபவர்கள் இவ்விரு திற்கு விண்ணப்பிக்க இயலாது. விண் ணப்பதாரருக்கு உள்ளூர் மக்களிடம் உள்ள செல்வாக்கு விருதிற்கான பரிசீல னையில் கணக்கில் கொள்ளப்படும். 1.5.2024 முதல் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள். 15.5.2024 அன்று மாலை 4 மணி வரை. மேற்கண்ட நிதியாண் டிற்கு கரூர் மாவட்டத்திலுள்ள தகுதி யுள்ள நபர்கள் www.sdat.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப் பித்து பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு கரூர் மாவட்ட விளையாட்டு மற்றும் இளை ஞர் நலன் அலுவலர் தொலைபேசி. 74017 03493 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.