அரியலூர், நவ.2 - அரியலூர் மாவட்டம் ஜெயங் கொண்டம் அருகே உள்ள கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதத்தில் வரும் பவுர்ணமி தினத்தன்று அன்னாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். உலக பிரசித்தி பெற்ற பிரக தீஸ்வரர் கோவில் ஆயிரம் ஆண்டு களுக்கு முன்பு, ராஜேந்திர சோழ னால் கங்கைநதி வரை போராடி வெற்றி பெற்றதன் சின்னமாக கட்டப்பட்டது. யுனெஸ்கோவால் உலக புராதன சின்னமாக அறிவிக்கப் பட்ட இக்கோவிலில் சிங்கமுக கிணறு, ஒரே கல்லில் ஆன நவகிரகம் பிரசித்தி பெற்றவை. கோவிலில் உள்ள 13.5 அடி உயர மும், 60 அடி சுற்றளவும் கொண்ட பிர கதீஸ்வரர் லிங்கத்திற்கு 100 மூட்டை அரிசியால் உணவு சமைத்து அன்னாபிஷேகம் செய்யப்படு கிறது. இந்து சமய அறநிலையத் துறை யினர் மற்றும் காஞ்சி சங்கர மட அன்னாபிஷேக கமிட்டியினர், கடந்த 39 ஆண்டுகளாக அன்னாபி ஷேகம் செய்து வருகின்றனர். இந்த அன்னாபிஷேகத்தையொட்டி, நவ.13 அன்று கணக்க விநாய கருக்கு அபிஷேகமும், நவ.14 அன்று பிரகன்நாயகி-பிரகதீஸ்வ ரருக்கு மகாபிஷேகமும் நடைபெற உள்ளது. நவ.15 ஆம் தேதி அன்னாபிஷேகம் நடக்கிறது. விழாவையொட்டி, காவல் துறை மற்றும் தீயணைப்பு துறை சார்பில் பாதுகாப்பு பணியும், சுகா தாரத்துறை சார்பில் மருத்துவ குழுவினரும் பணியில் ஈடுபடுத்தப் படுவர். பக்தர்களின் வசதிக்காக போக்குவரத்து துறை சார்பில் சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. விழாவிற்கான ஏற்பாடு களை இந்து சமய அறநிலையத் துறையினர் மற்றும் காஞ்சி சங்கர மட அன்னாபிஷேக விழா கமிட்டி யினர் செய்து வருகின்றனர்.