மணமேல்குடி பட்டாசு கடையில் வெடி விபத்து
அறந்தாங்கி, அக்.8 - தமிழக எல்லையான ஓசூர் அருகே ஏற்பட்ட வெடி விபத்தில் 13 பேர் உயிரிழந்த அதிர்ச்சி அடங்குவதற்குள், மீண்டும் ஒரு பட்டாசு கடையில் விபத்து ஏற்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடியில் காளிமுத்து என்பவருக்கு சொந்தமான பட்டாசு கடை உள்ளது. இந்த பட்டாசு கடையில் ஹார்டுவேர் பொருட்கள், மீன்பிடி சாமான்கள், ஜெராக்ஸ் உள்ளிட்ட வியாபாரமும் நடை பெற்று வந்தது. இந்நிலையில் ஞாயிறன்று காலை 7 மணியளவில் கடையிலிருந்து கரும்புகை வெளிவந்துள்ளது. சிறிது நேரத்தில் கடையில் உள்ள பட்டாசுகள் வெடிக்கத் தொடங்கியதால், அருகே டீக்கடையில் இருந்தவர்கள் உடனே ஜெகதாப்பட்டினம் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் அருகில் உள்ள மற்ற கடைகளுக்கும் தீ பரவாமல் தீயை அணைத்தனர். மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து நடந்திருக்கலாம் என்று தீயணைப்பு துறையினரும், போலீ சாரும் தெரிவித்தனர். இந்த விபத்தில் கடை முழுவதும் எரிந்து நாசமானது. சுமார் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்ததாக உரிமையாளர் தெரி வித்தார். அதிர்ஷ்டவசமாக இதனால் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை. ஓசூர் அருகே சனிக்கிழமை மாலை பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் 13 பேர் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து, மீண்டும் ஒரு பட்டாசு விபத்து நடந்தது பொது மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
கறம்பக்குடி அரசு மருத்துவமனை 24 மணிநேரமும் செயல்பட நடவடிக்கை எடுத்திடுக! முதல்வருக்கு எம்.சின்னதுரை எம்எல்ஏ கோரிக்கை
புதுக்கோட்டை, அக்.8 - கறம்பக்குடி அரசு மருத்துவமனைக்கு தேவையான மருத்துவர்கள், செவிலி யர்களை நியமித்து 24 மணிநேரமும் இயங்கும் மருத்துவமனையாகத் தரம் உயர்த்த நட வடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு முதல மைச்சருக்கு கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரை கோரிக்கை வைத்துள்ளார். இதுதொடர்பாக அவர் தமிழ்நாடு முதல மைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது: 25 ஆண்டுகளுக்கும் மேலாக கறம்பக் குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல் பட்டு வந்தது. இது கடந்த 2015 ஆம் ஆண்டு தாலுகா மருத்துவமனையாகத் தரம் உயர்த்தப் பட்டது. எனது தொகுதிக்குட்பட்ட இம் மருத்துவமனைக்கு தினமும் 500-க்கும் மேற்பட்டோர் வெளிநோயாளிகளாக வந்து செல்கின்றனர். இம்மருத்துவமனைக்கு போதுமான கட்டமைப்பு வசதிகள் இருந்தும், போதிய மருத் துவர்கள் மற்றும் செவிலியர்கள் இல்லாத தால் உள்நோயாளிகளாக தங்க வைக்கப்படு வதில்லை. சாதாரண சிகிச்சைகளுக்குக்கூட புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் மருத்துவ மனைகளுக்கு அனுப்பி வைக்கும் நிலை தொ டர்கிறது. அவசர சிகிச்சைக்கு மருத்து வர்கள் இல்லாததால், சில உயிர்களைக் காப்பாற்ற முடியாமல் போன நிகழ்வுகளும் நடந்துள்ளன. இதனால், கறம்பக்குடி பேரூராட்சி மட்டு மல்லாது அதைச் சுற்றியுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்களும் மிகுந்த சிரமத் திற்கு உள்ளாகின்றனர். இதுதொடர்பாக சுகாதாரத் துறை அமைச்சரிடம் எழுத்துப் பூர்வமான கோரிக்கை மனு அளித்து நேரி லும் வலியுறுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து கூடுதலான மருத்துவர்கள் நியமிக்கப்பட்டு, சில மாதங்கள் மருத்துவமனை சிறப்பாக செயல்பட்டது. ஆனால், மீண்டும் மருத்துவர்கள் பற்றாக் குறை ஏற்பட்டு பழைய கதையே தொடர் கிறது. இதனால் பொதுமக்களும், வணி கர்களும் மேற்கண்ட கோரிக்கைகளை வலியு றுத்தி அரசின் கவனத்தை ஈர்த்து வருகின்றனர். எனவே, கறம்பக்குடி தாலுகா மருத்துவ மனைக்கு கூடுதல் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை நியமித்து 24 மணி நேரமும் செயல்படவும், அவசர சிகிச்சைப் பிரிவுடன் டயாலிசிஸ், உடற்கூராய்வுக் கூடம், போது மான அளவில் உயிர்காக்கும் மருந்துகள் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தித் தரவும் நட வடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்.11 விவசாயிகள் முழு அடைப்பு போராட்டத்துக்கு திமுக ஆதரவு
தஞ்சாவூர், அக்.8- விவசாயிகள் கூட்டியக்கம் சார்பில், காவிரி நீர் கோரி டெல்டா மாவட்டங்களில் அக்டோபர் 11 அன்று நடைபெறும் முழு அடைப்பு மற்றும் ஒன்றிய அரசு அலுவலகங்கள் முன்பு நடைபெறும் மறியல் போராட்டத்திற்கு ஆதரவு தெரி வித்து, தஞ்சை தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தஞ்சை தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் பேரா வூரணியில் மாவட்டக் கழக அவைத் தலைவர் சுப.சேகர் தலைமையில் நடைபெற்றது. இதில், சட்டமன்ற உறுப்பி னர்கள் கா.அண்ணாதுரை (பட்டுக்கோட்டை), நா.அசோக் குமார் (பேராவூரணி) உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். கழக உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினரும், தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினருமான ச.சு.பழனிமாணிக்கம் சிறப்பு ரையாற்றினார். கூட்டத்தில், காவிரி நீர் கோரி அக்டோபர் 11 அன்று டெல்டா மாவட்டங்களில், விவசாய சங்கங்கள் நடத்தும் முழு அடைப்பு போராட்டத்திற்கு முழு ஆதரவு தெரிவிப்பது, ஒன்றிய அரசு அலுவலகங்கள் முன்பு நடைபெறும் மறியல் போராட்டத்தில் பங்கேற்பது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
வன உயிரின வார விழா
கரூர், அக்.8 - தமிழக அரசின் வனத்துறை சார்பில் 2023 ஆம் ஆண்டுக்கான வன உயிரின வார விழா, கரூரை அடுத்த தாந்தோணி மலைப் பகுதியில் உள்ள அரசு கலைக் கல்லூரி யில் நடைபெற்றது. கரூர் வன கோட்ட மாவட்ட அலுவலர் சரவணன் தலைமை வகித்தார். இந்நிகழ்ச்சியில் அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரி, மாணவ-மாணவிகள் பங்கேற்ற, கவிதை, பேச்சு, கட்டுரை, வினாடி-வினா மற்றும் கதை சொல்லுதல் போட்டிகள் நடை பெற்றன. போட்டியில் வென்ற மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் கேடயங்கள் வழங்கப்பட்டன. கல்லூரி முதல்வர், வன அலுவலக ரேஞ்ச் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கூடுதல் ஆட்சியர் ஆய்வு
தஞ்சாவூர், அக்.8 - தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம், சரபேந்திரராஜன்பட்டினம் ஊராட்சியில், முதலமைச்சர் கிராமச் சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின்கீழ், மனோரா சுற்று லாத் தலம் செல்லும் மீனவர் குடியிருப்பு சாலை அமைக்கப் பட்டு வருகிறது. இதனை, தஞ்சாவூர் மாவட்ட கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் ஆய்வு செய்தார்.
விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் கனவை நனவாக்கும் பணி விரைவில் தொடங்கும்
சந்திரயான்-3 திட்ட இயக்குநர் தகவல் திருச்சிராப்பள்ளி, அக்.8- சந்திரயான்-3 வெற்றியின் மூலம், விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) இலக்கு நனவாகும். வெற்றியை நெருங்கிவிட்டோம் என்றார் சந்திராயன் திட்ட இயக்குநர் பி.வீரமுத்துவேல். திருச்சிராப்பள்ளியில், நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி-திருச்சி (என்ஐடி-டி) நடத்திய நிகழ்வில் பங்கேற்ற அவர், மனிதர்களை நிலவிற்கு அனுப்பு வது குறித்து மாணவர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த வீரமுத்துவேல், அப்போது சந்திராயன்-3 பணியின் போது எதிர்கொண்ட சவால்களையும் எடுத்து ரைத்தார். “சந்திராயனை வெற்றிகரமாக தரையிறக்கி இந்தியா சாதித்துள்ளது. எங்களது அடுத்த ககன்யான் திட்டம் மனி தர்களை விண்வெளி ஆராய்ச்சியில் ஈடு படுத்துவதை நோக்கமாகக் கொண்டு உள்ளது. அதற்கான பணிகள் விரைவில் தொடங்கும் என்றார். விண்வெளி ஆய்வில் தனியார் நிறு வனங்கள் மற்றும் ஸ்டார்ட் அப்கள் நுழை வது வரவேற்கத்தக்கது என்றார். மற்றொரு நிகழ்வில் பேசிய அவர், சந்திர யான்-3-ன் வெற்றி மாணவர் சமுதாயத்தை உத்வேகப்படுத்தக் கூடியது. எனக் கூறி அவர், சந்திரயான்-2 தோல்வியில் இருந்து பாடங்களை நாங்கள் கற்றுக்கொண்டது போல், உங்கள் தவறுகளிலிருந்து நீங்கள் பாடம் கற்றுக் கொள்ளவேண்டும். அதன் மூலம் அர்ப்பணிப்போடு உங்கள் இலக்கை நீங்கள் அடைய முடியுமென்றார்.
பசிப்பிணி போக்கும் லயன் சங்கத்தினர்
கும்பகோணம், அக்.8- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார்கோவில் லயன் சங்கம், பொதுநல நோக்கத்தோடு பல்வேறு சமூக நலப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இச்சங்கத்தின் ஒரு திட்டமான பசிப்பிணி போக்கும் திட்டத்தின்கீழ், பல்வேறு உதவி களையும் பசியால் வாடும் பலருக்கு உணவும் வழங்கி வருகிறது. இந்நிலையில் லயன் சங்கத்தின் உறுப்பி னர்கள் மற்றும் குடும்பத்தினர் பிறந்த நாள்-நினைவு நாள் உள்ளிட்ட சிறப்பு தினங்களில், முதியோர் இல்லம், ஆதர வற்றோர் காப்பகங்களுக்கு உணவு வழங்கி வருகின்றனர். இதையொட்டி சங்க உறுப்பி னர் செந்தில்குமார் ஏற்பாட்டில், சீனிவாச நல்லூர் பகுதியில் இயங்கி வரும் அன்னை அரவிந்தர் ஆதரவற்ற முதியோர் காப்ப கத்தில் உள்ளவர்களுக்கு உணவு வழங்கப் பட்டது. சங்க செயலாளர் முத்து மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். காப்பக நிர்வாகி வள்ளி நன்றி தெரிவித்தார்.