கும்பகோணம், ஜன.2- அரசு பள்ளிகளை தனியாரிடம் ஒப்ப டைக்கும் முயற்சியை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும். மாநில கல்வி உரி மைகளை பாதுகாத்திட வேண்டும் என்று வலியுறுத்தி இந்தியா மாணவர் சங்கம் சார்பில் கும்பகோணம் அரசு ஆடவர் கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கிளைச் செயலா ளர் சி. கோபிநாத் தலைமை வகித்தார். கிளைத் தலைவர் பரசுராமன் விளக்கிப் பேசினார். ஆர்ப்பாட்டத்தில் பலர் பங்கேற் றனர்.