districts

திருச்சி முக்கிய செய்திகள்

விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருவாரூர், ஆக.25 - திருவாரூர் அருகே  காட்டூரில் உள்ள ஸ்ரீதியா கராஜா கல்வியியல் கல்லூரியில் தேசிய நாட்டு நலப்பணித் திட்டத்தின் (என்எஸ்எஸ்) சார்பாக, கல்லூரி வளா கத்தில் குழந்தைகள் நலம் மற்றும் பாதுகாப்பு குறித்து ஆசிரியர் பயிற்சி மாணாக்கர்களுக்கு விழிப் புணர்வு நிகழ்ச்சி நடை பெற்றது. கல்லூரி செயலர் ந. கணேசன் தலைமை வகித்து, நிகழ்ச்சியை துவக்கி வகித்தார். கல்லூரி முதல்வர் கோ. உமாமகேஸ்வரி முன் னிலை வகித்தார். தொ டர்ந்து அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். நாட்டு நலப்பணித் திட்ட முகாம் ஒருங்கிணைப்பாளர் பி.கே.இளவரசி, ஜெ. ஞானவடிவேல் ஆகி யோர் நிகழ்ச்சியை ஒருங் கிணைத்தனர்.

மறு கட்டமைப்பு கூட்டம்

பாபநாசம், ஆக.25 - தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் பள்ளி மேலாண் மைக் குழு மறு கட்ட மைப்பு கூட்டம் நடந்தது.  கூட்டத்திற்கு வட்டார  வளமைய மேற்பார்வை யாளர் (பொ) முருகன் தலைமை வகித்தார். பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவியாக புவ னேஸ்வரி, துணைத் தலைவியாக கேத்ரின் விமலா உட்பட உறுப்பி னர்கள் தேர்வாகினர். பள்ளித் தலைமை ஆசிரி யர் ரமேஷ், ஆசிரியை விமலா, கல்வியாளர் ரெமி பாஸ்டினா, பாபநா சம் பேரூராட்சி கவுன்சி லர்கள் பங்கேற்றனர். 

முதியவரிடம் வழிப்பறி

தஞ்சாவூர், ஆக.25 -  தஞ்சாவூர் தென்றல் நகரைச் சேர்ந்த சி. முரளிதரன் (60) ஆக.21  அன்று இரவு பழைய வீட்டு வசதி வாரியக் குடி யிருப்பு அருகே நடந்து  சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் இவரை வழிமறித்து மிரட்டி,  இவரிடமிருந்த ரூ.1,400  ரொக்கம், கைப்பேசி யைப் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். இது குறித்து தெற்கு காவல்  நிலையத்தினர் வெள்ளிக் கிழமை இரவு வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

வீட்டின் கதவை உடைத்து திருட்டு

தஞ்சாவூர், ஆக.25-  தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே கீழத்திருப்பூந்துருத்தி முதன்மைச் சாலை யைச் சேர்ந்தவர் சி. காமராஜ் (56). இவர் புது தில்லியில் எல்லை பாது காப்புப் படையில் ஆய் வாளராகப் பணியாற்றி வருகிறார். இவரது வீட்டை அருகில் வசிக்கும்  தாயும், சகோதரரும் நிர்வகித்து வருகின்றனர். இந்நிலையில், இவரது வீட்டில் ஆக. 19 அன்று  காலை கதவு உடைக்கப் பட்டு கிடந்தது. தகவ லறிந்த காமராஜின் உறவி னர்கள் சென்று பார்த்த போது, பீரோவில் இருந்த  பித்தளை குத்துவிளக்கு, 4 பட்டு வேட்டி, சட்டை கள், 8 பட்டுச் சேலைகள் உள்ளிட்ட பொருள்கள் திருட்டு போயிருந்தன. இதுகுறித்து நடுக்கா வேரி காவல் நிலையத்தி னர் வழக்குப் பதிந்து  விசாரணை மேற் கொண்டுள்ளனர்.

ஆக்கிரமிப்பில் உள்ள பஞ்சமி நிலத்தை மீட்டு  பட்டியலின மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருக!

சிபிஎம் கோரிக்கை தஞ்சாவூர், ஆக.25 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சை மாவட்டம் பூதலூர் தெற்கு ஒன்றியம், பூதலூர் காளியம்மன் கோவில் தெரு கிளை மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.  மூத்த தோழர் இ.முகமது சுல்தான் கொடி ஏற்றினார். மாநாட்டுத் தலைவராக தங்கையன் தேர்வு செய்யப்பட்டார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ்.தமிழ்ச்செல்வி துவக்கவுரையாற்றினார். ஸ்தாபன அறிக்கையை கிளைச் செயலாளர் ஆர்.கோவிந்தராஜ் வாசித்தார். கிளைச் செயலாளராக மீண்டும் ஆர்.கோவிந்தராஜ் தேர்வு செய்யப்பட்டார். பூதலூர் தெற்கு ஒன்றியச் செயலாளர் சி.பாஸ்கர் நிறைவுரையாற்றினார்.  பூதலூர் காளியம்மன் கோவில் தெரு, பாத்திமா நகர் பகுதியில் அனைத்து சாலைகளையும் உடனடியாக சீர் செய்ய வேண்டும். காலை, மாலை வேளைகளில் பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும். காவிரி தண்ணீர் அனைத்து தெருக்களுக்கும் கிடைக்கச் செய்ய வேண்டும். காளியம்மன் கோவில் தெரு சுகாதார வளாகத்தில் சுற்றுச்சுவர் எழுப்பி செப்பனிட்டு மக்கள் பயன்பாட்டிற்கு உகந்ததாக மாற்ற வேண்டும். பூதலூர் என்.வி நகரில் அமைந்திருக்கும் தோழர் டி.கே.ரங்கராஜன் சமுதாயக் கூடத்திற்கு சுற்றுச்சுவர் கட்டித்தர வேண்டும். பூதலூரில் ஆக்கிரமிப்பில் உள்ள பஞ்சமி நிலத்தை மீட்டு பட்டியல் சமூக மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கல்லூரணிக்காடு கிராமத்தில்
கால்நடை தீவன மேலாண்மை பயிற்சி

தஞ்சாவூர், ஆக.25 - தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி வட்டாரத்தில், அட்மா திட்டத்தின்கீழ் கால்நடைகளுக்கான தீவனப் புல் வளர்ப்பு, கால்நடைகளின் தீவன மேலாண்மை குறித்த பயிற்சி கல்லூரணிக்காடு கிராமத்தில் நடைபெற்றது. இதில், வட்டார தொழில்நுட்ப மேலாளர் பொன்.செல்வி வரவேற்றார். கால்நடை தீவன மேலாண்மை மற்றும் முக்கியத்துவம், தீவனங்களின் மேலாண்மை குறித்து பேராவூரணி கால்நடை உதவி மருத்துவர் எஸ்.திருக்குமார் பேசுகையில், “கால்நடைகளுக்கு தேவையான சத்து மிகுந்த பசுந்தீவனங்கள் அளிப்பதால் பால் உற்பத்தியை மென்மேலும் பெருக்கலாம். தீவனங்களில் இரண்டு வகைகள் உள்ளன.  ஒன்று எளிதில் செரிக்கக்கூடிய நார் மற்றும் மாவுச்சத்து அதிகம் கொண்டவை, மற்றது புரதச்சத்து அதிகம் கொண்டது. பசுந்தீவனங்களில் உள்ள நார்ச்சத்து அதிக செரிமானம் உடையது. நார்ச்சத்து அசையூன் இரைப்பையில் சித்தூர் அசிடிக் அமிலமாக மாற்றப்படுகிறது.  இந்த அமிலம் தான் பாலில் கொழுப்புச் சத்தினை அதிகமாக்குவதில் முக்கிய செயலாற்றுகிறது. இதனால் பாலின் கொழுப்புச் சத்து வீதம் கூடுதலாகி விவசாயிகளுக்கு அதிக லாபத்தினை தருகிறது.  பசும்புல்லில் உள்ள புரதச் சத்துகள் கால்நடைகள் நன்கு வளரவும், சினை பிடிக்கவும், கன்று வளர்ச்சிக்கும் முக்கிய செயலாற்றுகிறது. பசுந்தீவனங்களை அளிப்பதன் மூலம் பசுக்களுக்கு தேவையான வைட்டமின் ‘ஏ’ சத்து அதிகளவில் கிடைக்கிறது.  கால்நடைகளுக்கு தானிய தீவனப் பயிர்களையும், பயறு வகை தீவனப் பயிர்களையும் சரிவிகிதத்தில் அளித்தால், மொத்த தீவனச் செலவு குறைவதோடு நிகர லாபமும் அதிகரிக்கும். அசோலா வளர்த்து விவசாயிகள் பயனடையலாம்” என்றார். 

கைப்பந்து போட்டி அரசுப் பள்ளி மாணவர்கள் வெற்றி

பாபநாசம், ஆக.25 - தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்ட அளவில் 17, 19  வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கான கைப்பந்து போட்டி  நடைபெற்றது. இதில் பாபநாசம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் முதலிடம் பெற்றனர். 17 வயதிற்குட்பட்ட இரட்டையர் வளையப் பந்து  போட்டியில் முதலிடமும், ஒற்றையர் வளையப் பந்து போட்டியில் இரண்டாமிடமும் பெற்றனர்.  சாலியமங்கலம் அருகே பூண்டி கல்லூரியில் நடை பெற்ற வட்ட அளவிலான தடகளப் போட்டியில் 11 ஆம்  வகுப்பு மாணவர் லோகேஸ்வரன் 100 மீ, 200 மீ-இல் முத லிடம் பெற்றார். 12 ஆம் வகுப்பு மாணவர் சேசன் தத்தி  தபடி தாண்டுதல் போட்டியில் 19 வயதிற்குட்பட்ட பிரிவில்  முதலிடமும், நீளம் தாண்டுதலில் மூன்றாம் இடமும்  பெற்றார். தடை தாண்டும் போட்டியில் 19 வயதிற்குட் பட்ட பிரிவில் அசாருதீன் முதலிடம் பெற்றார்.  போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளித் தலைமையாசிரியர் மணியரசன், உடற்கல்வி ஆசிரியர் செல்வகுமார், என்.சி.சி அலுவலர் சரவணன், உடற்கல்வி  இயக்குநர் உள்ளிட்டோர் பாராட்டினர்.

மூதாட்டி அடித்துக் கொலை திருடிய நகையை அடகு வைத்து செலவு செய்தவர் கைது

தஞ்சாவூர், ஆக.25 - தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே உஞ்சிய விடுதி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆயிராசு (65). இவரது கண வர் ஜோதிவேல் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து  விட்டார். பிள்ளைகள் இல்லாததால் ஆயிராசு தனியாக  வசித்து வந்தார். இந்நிலையில், கடந்த ஆக.21 அன்று மூதாட்டி ஆயிராசு  நூறு நாள் வேலைத் திட்டப் பணிக்கு சென்று விட்டு, வீட்டிற்கு திரும்பிவிட்டார். அதன் பிறகு இரண்டு நாட்க ளாக ஆயிராசு வேலைக்கு செல்லவில்லை. தொடர்ச்சி யாக வேலைக்கு வரும் ஆயிராசு இரண்டு நாட்களாக வேலைக்கு வராததால், அவரது வீட்டிற்கு சென்று நூறு  நாள் வேலை திட்ட ஒருங்கிணைப்பாளர் பார்த்துள்ளார். அப்போது, ஆயிராசு வீட்டில் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்துள்ளார். மேலும், அவர் அணிந்திருந்த தோடு, செயின் இல்லாமல் இருந்தது. இதனால் சந்தேக மடைந்த அவர்கள் திருவோணம் காவல்துறைக்கு தகவல்  அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மூதாட்டி ஆயிராசு உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி னர்.  அப்போது காவல்துறையின் மோப்ப நாய் சோழா, மூதாட்டி ஆயிராசு வீட்டின் அருகே உள்ள செல்வராஜ் (60) என்பவர் வீட்டிற்குச் சென்றது. சந்தேகமடைந்த காவல் துறையினர் செல்வராஜைப் பிடித்து விசாரணை நடத்தினர்.  விசாரணையில், ஆயிராசு வீட்டில் இருந்த தென்னை மரத்திலிருந்து தேங்காய் மட்டை செல்வராஜின் வீட்டுப் பகுதியில் விழுந்துள்ளது. இதில் ஆயிராசுவிடம் செல்வ ராஜ் பலமுறை தகராறு செய்துள்ளார். இந்நிலையில், மீண்டும் மூதாட்டி ஆயிராசுவிடம் தகராறு ஏற்பட்ட நிலை யில், செல்வராஜ் குடித்துவிட்டு ஆயிராசு வீட்டிற்கு வந்து அவரை கட்டையாலும், காலி பீர்பாட்டிலாலும் அடித்து  கீழே தள்ளியுள்ளார். இதில் ஆயிராசு இறந்துள்ளார். பிறகு செல்வராஜ் மூதாட்டி அணிந்திருந்த இரண் டரை சவரன் தோடு, செயினை திருடி தனியார் நகைக்  கடையில் அடகு வைத்து, குடித்துவிட்டு வீட்டில் எதுவும் தெரியாதது போல இருந்துள்ளார். செல்வராஜிடம் இருந்த அடகு வைத்த ரசீது மூலம் கொலையை உறுதி செய்த  திருவோணம் காவல்துறையினர் சனிக்கிழமை மாலை அவரை கைது செய்தனர்.

நண்பர்களுடன் காவிரி ஆற்றில் குளித்த 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி 

தஞ்சாவூர், ஆக.25 - தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு ராஜா நகரைச் சேர்ந்தவர் செந்தில்குமார் மகன் ஹரிபிரசாத் (16). இவர்  தஞ்சாவூரில் ஒரு பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். இதேபோல் திருவையாறு மேலவட்டம் பகுதியைச் சேர்ந்த  ராமலிங்கம் மகன் பிரவீன் (12), திருவையாறில் 7 ஆம்  வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணி யளவில் ஹரிபிரசாத், பிரவீன் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட நண்பர்கள், திருவையாறு அய்யப்பன் கோவில்  படித்துறை காவிரி ஆற்றில் குளித்து கொண்டிருந்தனர். அப்போது, தண்ணீரின் வேகம் அதிகரித்ததால் ஹரிபிர சாத், பிரவீன் ஆகிய இருவரும் நீரில் அடித்துச் செல்லப் பட்டனர். நண்பர்களின் அலறல் சத்தம் கேட்டு, சக நண்பர்கள் கரைக்கு வந்து பொதுமக்களிடம் தகவல் அளித்த னர். இதற்கிடையில், தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்ட  ஹரிபிரசாத், பிரவீன் ஆகிய இருவரும் நீரில் மூழ்கினர். இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள், ஆற்றில் மூழ்கிய சிறுவர்களை இரண்டு மணி நேரப் போராட்டத்திற்கு பிறகு இருவரையும் மயங்கிய நிலையில்  மீட்டு, சிகிச்சைக்காக திருவையாறு அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இரண்டு சிறுவர் களையும் பரிசோதித்த மருத்துவர்கள் இருவரும் ஏற்க னவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து திரு வையாறு காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

கணவரை அரிவாளால் வெட்டி  பெண்ணிடம் நகை பறிப்பு

தஞ்சாவூர், ஆக.25 - தஞ்சாவூர் அருகே மாதாகோட்டை அன்னை தெரசா  தெருவைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (43). மினி லாரி ஓட்டு நரான இவர், தனது மனைவி திலகவதியுடன் பாபநாசம் அருகேயுள்ள கபிஸ்தலத்தில் வெள்ளிக்கிழமை நடை பெற்ற உறவினர் வீட்டு சுபநிகழ்ச்சியில் கலந்து கொண்டு,  இரவு பைக்கில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். கும்பகோணம் - தஞ்சாவூர் புதிய புறவழிச்சாலையில் குருங்களூர் வெண்ணாற்றுப் பாலத்தில் வந்தபோது, பின்னால் இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத 3 பேர் இவர்களை வழிமறித்து நிறுத்தினர். இதையடுத்து, செந்தில்குமாரை மர்ம நபர்கள் கீழே தள்ளிவிட்டு, அவரை அரிவாளால் வெட்டிவிட்டு, திலகவதி  கழுத்தில் அணிந்திருந்த 6.5 பவுன் இரு தங்கச் சங்கிலி களைப் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.  பலத்த காயமடைந்த செந்தில்குமார் தஞ்சாவூர்  மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார். இதுகுறித்து தாலுகா காவல் நிலையத்தினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கம்பம் குடியிருப்பு பகுதியில் சிறுத்தை  பிடிக்க சென்ற வனத்துறை ஊழியர் மீது தாக்குதல்

தேனி, ஆக. 25- கம்பத்தில் கோம்பை ரோடு குடியிருப்பு பகுதி யில் சிறுத்தை நடமாட்டத் தால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். பிடிக்க சென்ற  வனத்துறை ஊழியரை சிறுத்தை தாக்கியதில் தலை யில் காயம் ஏற்பட்டு கம்பம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் கம்பம் நகராட்சி 1வது வார்டு பகுதி  கோம்பை ரோடு பகுதியா கும். இப்பகுதியில் வசித்து  வரும் ஈஸ்வரன் என்பவரது  வீட்டின் அருகே சனிக்  கிழமை காலை பறவைகள்  சத்தம் கேட்டுள்ளது. இத னால் அங்கு என்ன இருக்கி றது என்று அப்பகுதியில் உள்ள புதரில் சென்று பார்த்  துள்ளார். அப்போது அங்கு  சிறுத்தை ஒன்று பதுங்கி இருந்ததை பார்த்து பயந்து ஓடியுள்ளார். அப்போது நாய்கள் குரைத்ததால் சிறுத்தை அங்கிருந்து மற்றொரு புதர் பகுதிக்குள் சென்று ஒளிந்து கொண்டது. இதுகுறித்து  வனத் துறை, காவல்துறை மற்றும்  தீயணைப்புத் துறையின ருக்கு தகவல்  கொடுக்கப் பட்டது. இதையடுத்து அப்பகுதிக்கு விரைந்து வந்த வனத்துறையினர், சிறுத்தை நடமாட்டம் குறித்து  ஆய்வு செய்தனர். வனத்  துறையினர் தேடி சென்ற போது வனக்காப்பாளர் ரகுராம் பாண்டியன் என்ப வரை புதருக்குள் ஒளிந்தி ருந்த சிறுத்தை திடீரென தாக்  கியது. இதில் அவரது தலை யில் காயம் ஏற்பட்டது.  இதனைக் கண்ட மற்ற  வனத்துறையினர், அப்பகுதி யில் இருந்து வெளியேறி னர். காயம் பட்ட வனக்காப் பாளருக்கு கம்பம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வரு கிறது. அந்தப் பகுதியை சுற்றி லும் தற்போது வனத்துறை யினர் மற்றும் காவல்துறை யினர், தீயணைப்புத் துறை யினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சிறுத்தை பிடிபடும் வரை  யாரும் வீட்டை விட்டு வெளியே  வர வேண்டாம் என பொது மக்களுக்கு வனத் துறை எச்ச ரிக்கை விடுத்துள்ளனர்.