districts

img

கல்வி கடன் முகாம்

திருவாரூர் மாவட்டம், அம்மையப்பன் குளோபல் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கியான இந்தியன் ஓவர்சிஸ் இணைந்து மாபெரும் கல்வி கடன் முகாமை நடத்தின. இதில் 63 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.3 கோடியே 13 லட்சம் மதிப்பில் கல்வி கடனுக்கான வங்கி வரைவோலையை மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ வழங்கினார். முகாமில் முன்னோடி வங்கி மேலாளர் செந்தில், உதவி இயக்குநர் (திறன் பயிற்சி) செந்தில்குமாரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.