districts

img

போக்குவரத்துக் கழகத்தில் உணவகங்கள் மூடப்பட்டதற்கு கண்டனம்

தஞ்சாவூர், ஆக.3-  போக்குவரத்துக் கழகத்தில் உண வகங்களை மூடியதற்கு கண்டனம்  தெரிவித்து, அனைத்து தொழிற்சங்கங் கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம்  மண்டல தமிழ்நாடு அரசு போக்கு வரத்துக் கழகத்தில் தொழிலாளர்கள், பணியாளர்களுக்கு மதிய உணவை நிர்வாகம் தனது பொறுப்பில் வழங்கி வந்தது. தற்போது நிர்வாகச் சிக்கனம் என்ற பெயரில், செயல்பட்டு வந்த  உணவகத்தை ஆக.1 முதல் மூடி  விட்டு, தனியாரிடம் மதிய உணவு வழங்கும் பணியை ஒப்படைத்துள்ளனர். நடந்து முடிந்துள்ள 14 ஒப்பந்தங் களிலும் உணவகம் கோரிக்கையாக இடம்பெற்று பேசப்பட்டு வந்துள்ளது. தற்போது பேசப்படவிருக்கும் 15 ஆவது  ஊதிய ஒப்பந்தத்திலும் உணவகம் குறித்து கோரிக்கை உள்ளது. தற்போ துள்ள விலைவாசிக்கு ஏற்ப தரமான உணவை வழங்க வேண்டும். தனியா ரிடம் ஒப்படைக்க கூடாது என்ற கோரிக் கையும் அதில் இடம் பெற்றுள்ளது. கும்பகோணம் போக்குவரத்துக் கழகத்தில் அனைத்து பணிமனைகளி லும் ஏறத்தாழ ஆயிரம் பேர் மதிய உணவு சாப்பிட்டு வந்த நிலையில், உண வகத்தை மூடியது மற்றும் தனியாரி டம் ஒப்படைத்துள்ளதை கண்டித்து  தஞ்சாவூரில் அனைத்து தொழிற்சங்கங் கள் சார்பில் இரண்டு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  கரந்தை புறநகர் கிளை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிஐ டியு செயலாளர் டி.முருகானந்தம், ஜெப மாலைபுரம் தஞ்சாவூர் நகர் கிளை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஏஐடியுசி பொதுச் செயலாளர் எஸ்.தாமரைச்செல்வன் ஆகியோர் தலைமை வகித்தனர்.   போக்குவரத்து சம்மேளனத்தின் மாநில துணைத் தலைவர் துரை.மதி வாணன், ஏஐடியுசி பொருளாளர் சி.ராஜ மன்னன், சிஐடியு மத்திய சங்கப் பொரு ளாளர் எஸ்.ராமசாமி, ஐஎன்டியுசி நிர்வாகி தி.மணிகண்டன், எஸ்இசிடி பணிமனை பொருளாளர் முருகேசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.