தஞ்சாவூர், ஜூலை 5-
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலை பி.எஸ்.என்.எல் ஊழியர் காலனியைச் சேர்ந்த வர் சுரேஷ்(46). இவருக்கு டாடா கேபிடல் என்ற நிறுவன லோகோவுடன், ஆன்லைன் மூலம் லோன் பெறுவதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள தாகவும், 2.50 லட்சம் ரூபாய் லோன் கிடைக் கும் என வாட்ஸ் அப்பில் குறுஞ்செய்தி வந்துள் ளது. இதை பார்த்த சுரேஷ் அந்த வாட்ஸ் அப்பில் வந்த மொபைல் எண்ணுக்கு தொடர்பு கொண் டுள்ளார்.
மறுமுனையில் பேசிய மர்ம நபர், சுரேஷின் ஆதார் கார்டு, பான் கார்டு, போட்டோ, வங்கி விபரங்களை கேட்டு பெற்றுள்ளார். சுரேஷூம் அந்த நபர் கேட்ட விபரங்களை அனுப்பியுள் ளார். அதன் பிறகு, அந்த நபர் ஒரு விண்ணப்பம் ஒன்றை சுரேஷூக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பி, அதை பூர்த்தி செய்ய கூறியுள்ளார். அத்துடன் லோன் பெறுவதற்கு குறைந்தது வங்கி கணக் கில் ரூ.25 ஆயிரம் இருக்க வேண்டும் எனவும் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்.
பின்னர் சுரேஷிடம், நீங்கள் அளித்த தக வல்கள் சரியானது தானா என உறுதி செய்ய வேண்டும். எனவே உங்களின் ஏ.டி.எம் விப ரங்களை தாருங்கள் என்று அந்த மர்மநபர் கேட்டுள்ளார். இதை நம்பிய சுரேஷ், ஏடிஎம் பின் நம்பர் உட்பட அந்த மர்மநபர் கேட்ட அனைத்து விபரங்களையும் கொடுத்துள்ளார். தொடர்ந்து சுரேஷின் வங்கி கணக்கிலிருந்து ரூ.24,955 பணம் எடுக்கப்பட்டுள்ளதாக குறுஞ்செய்தி வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த சுரேஷ், இதுகுறித்து போனில் பேசிய மர்ம நபரி டம் கேட்டுள்ளார். அப்போது அந்த மர்ம நபர் இணைப்பை துண்டித்து விட்டார்.
பின்னர் சுரேஷ் பலமுறை அந்த போன் நம்பருக்கு தொடர்பு கொண்டும் எவ்வித பதிலும் இல்லை. இதனால், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சுரேஷ், கடந்த ஜூன் 25 அன்று இணையதள குற்றப்பிரிவில் ஆன்-லைனில் புகார் அளித்தார். மேலும், ஜூலை 1 அன்று தஞ்சாவூர் இணையதளக் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் நேரில் சென்று புகார் செய்தார்.
இதுகுறித்து இணையதளக் குற்றப்பிரிவு கூடுதல் காவல்துறை இயக்குநர் சஞ்சய் குமார், காவல் கண்காணிப்பாளர் தேவராணி மற்றும் தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஸ் ராவத், தஞ்சாவூர் மாவட்ட இணைய தளக் குற்றப்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப் பாளர்கள் முத்தமிழ்செல்வன் மற்றும் ஜெயச் சந்திரன் ஆகியோர் உத்தரவின் பேரில், காவல்துறையினர் தனிப்படை அமைத்தனர்.
தொடர்ந்து அந்த மர்ம நபரின் மொபைல் எண் சிக்னல்களை வைத்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அந்த மர்ம நபர் அரக்கோணத்தில் இருப்பதாக தெரியவந்தது. அங்கு விரைந்து சென்ற இணையதளக் குற்றப்பிரிவு காவல்துறையினர் நாகப்பட்டினம் மாவட்டம் மேலகோட்டைவாசல் பகுதியைச் சேர்ந்த கார்த்திசன் (34), சென்னை வியாசர்பாடியை சேர்ந்த சுரேஷ் (34) ஆகிய இருவரை பிடித்து விசாரித்தனர்.
மேலும் அவர்களிடம் இருந்து 42 மொபைல் கள், 37 மொபைல் சார்ஜர்கள், பயன்படுத்தப் படாத 19 சிம் கார்டுகள், பயன்பாட்டில் இருந்த 21 சிம் கார்டுகள், 3 அலுவலக வருகைப்பதிவேடு நோட்டு புத்தங்கள், பணம் செலுத்தியவர்களின் விபரங்கள் அடங்கிய 13 புத்தகங்கள் ஆகிய வற்றை பறிமுதல் செய்து இருவரையும் திங்கட் கிழமை இரவு கைது செய்தனர்.
தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசார ணையில், அரக்கோணம் பகுதியில் ஐ.டி.நிறு வனம் என்ற பெயரில், மூன்று அலுவலகங் களை வைத்து நடத்தி வந்துள்ளனர். இவர்கள் தமிழகம் முழுவதும் தஞ்சாவூர், திண்டுக்கல், தருமபுரி, கோவை, கடலூர், மதுரை, புதுச்சேரி என 17 மாவட்டங்களில் இதுவரை 31 பேரிடம் சுமார் 17.50 லட்சம் ரூபாயை மோசடி செய்தது தெரிய வந்துள்ளது. கைது செய்யப்பட்ட சுரேஷ், கார்த்திசன் இருவர் மீதும் பல்வேறு கொலை, கொள்ளை, பண மோசடி வழக்குகள் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து இணையதளக் குற்றப்பிரிவு காவல்துறையினர் சுரேஷ், கார்த்திசன் இரு வரையும் தஞ்சை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைந்தனர். இந்த வழக்கில் தொடர் புடைய மற்றொரு முக்கிய குற்றவாளி தலை மறைவாக உள்ளார். அவரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.