திருச்சிராப்பள்ளி, செப்.23 - காஞ்சிபுரத்தில் தொழிற் சங்கம் அமைத்ததற்காக போராடும் சாம்சங் தொழி லாளர்களுக்கு ஆதரவு தெரி வித்தும், ஒன்றிய மோடி அரசு கடந்தாண்டில் நிறை வேற்றிய தொழிலாளர் களின் உரிமைகளை, வேலை நேரத்தை, குறைந்த பட்ச சம்பளத்தை, சங்கம் வைக்கும் உரிமையை பறிக்கும் தொழிலாளர் நல சட்ட தொகுப்பு திருத்தப் பட்ட சட்டம் நிறைவேற்றிய நாள் கருப்பு நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது. இந்நிலையில், அனைத் துத் தொழிற்சங்கங்கள் திங்க ளன்று நாடு முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் கருப்புக் கொடியேந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். திருச்சியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தொ. மு.ச மாவட்ட கவுன்சில் செய லாளர் ஜோசப் நெல்சன் தலைமை வகித்தார். ஆர்ப் பாட்டத்தில் தொ.மு.ச. மண்டல பொதுச் செயலா ளர் குணசேகரன், சிஐடியு மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன், மாவட்டச் செயலாளர் சுரேஷ்குமார், ஏஐசிசிடியு அருண்குமார், ஐஎன்டியுசி மாவட்டத் தலை வர் வெங்கட் நாராயணன், எல்.எல்.எப். தெய்வீகன், சிஐடியு ராஜி, ஏஐடியுசி பெரி யசாமி, தொமுச துணைத் தலைவர் செல்வம், ரவீந்தி ரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். அமைப்பு சாரா ஐஎன்டி யுசி மாவட்டத் தலைவர் ஆறு முகம் நன்றி கூறினார். செப்.24 (செவ்வாய்க் கிழமை) அன்று மின்வாரி யம், போக்குவரத்து, ரயில்வே, பெல் மற்றும் அரசுத்துறை, நிறுவனங் கள் முன்பு அனைத்து தொ ழிற்சங்கம் சார்பாக கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்தப் படுகிறது.