புதுக்கோட்டை, செப்.10 - சிறைத்துறையில் அதிகாரிகளின் வீடுகளில் சிறைவாசிகளை வைத்து வேலை வாங்குவதாக புகார் கள் வந்தால் கட்டாயம் நட வடிக்கை எடுக்கப்படும் என்றார் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி. புதுக்கோட்டையில் திங்கள்கிழமை அவர் அளித்த பேட்டியில், “ஒப்பீட் டளவில் இந்தியாவிலேயே சட்டம்-ஒழுங்கு சரியாக இருக்கக் கூடிய மாநிலம் தமிழ்நாடுதான். இதை வெளிநாடுகளில் இருந்து வந்து செல்வோர் ஒப்புக் கொள்கிறார்கள். மன சாட்சியில்லாமல் குறை சொல்வோருக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது. சிறைத்துறையில் அதி காரிகளின் வீடுகளில் சிறை வாசிகளை வைத்து வேலை வாங்கக் கூடாது. அப்படி ஏதேனும் புகார்கள் வந்தால் கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும். நடிகர் விஜய்யின் கட்சி நடத்தும் மாநாட்டுக்காக சில விளக்கங்களைக் கேட்டு அனுமதி அளிக்கிறோம். தமிழ்நாட்டின் கல்வித் தரம் பற்றி ஆளுநர் குறை கூறியிருக்கிறார். யாரும் எழுதிக் கொடுத்து வாசிக்கா மல், உண்மை நிலவரத்தை அவர் தெரிந்து கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் அமலில் உள்ள சமச்சீர்க் கல்வி முறையில் படித்த ஏராளமானோர்தான் அறிஞர் களாக, அதிகாரிகளாக உயர்ந்திருக்கிறார்கள். வெளிநாட்டு தொழில் முதலீடுகள் குறித்து தினந் தோறும் செய்திகளை வெளி யிடுகிறோம். எல்லாம் தெளி வாக இருப்பதால், இதற்காக வெள்ளை அறிக்கை வெளி யிட வேண்டியதில்லை” என்றார்.