districts

img

சிபிஎம் ஆர்ப்பாட்டம் வெற்றி கட்டளைமேடு மெயின் வாய்க்காலில் தண்ணீர் திறந்துவிட நடவடிக்கை

கரூர், செப்.15 - விவசாயத்தையும், விவசாயி களையும் அழித்திடும் நோக்கில் செயல்படும் குளித்தலை பொதுப் பணித்துறை ஆற்றுப் பாதுகாப்புத் துறை நிர்வாகத்தை கண்டித்து  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் குளித்தலை ஒன்றிய குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதைத் தொ டர்ந்து கோரிக்கைகளை நிறை வேற்றி தருவதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். காவிரி கரையில் உள்ள கரூர்  மாவட்டம், குளித்தலை தாலுகா வுக்குட்பட்ட பகுதிகளுக்கு கட்டளை மேட்டு வாய்க்காலில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் வந்து கொண்டிருந்தது. ஆனால்  கருங்கலாப்பள்ளி அருகே கட்டளை மேட்டு மெயின் வாய்க்காலில் பாலம் கட்டுமான  பணிக்காக குழாய் அமைத்து  தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு உள்ளது. இதனால் சேப்பளாபட்டி அருகே உள்ள மதகு-26 இல் 1/2 மீட்டர் தண்ணீர் அளவு மட்டுமே  உள்ளது. இந்த மதகில் 1 1/4 மீட்டர்  அளவு தண்ணீர் இருந்தால் மட்டுமே பாசனத்திற்கு மதகை திறக்க முடியும். நச்சலூர் சி கிளாஸ் பகுதி மதகு-19-லும் பாசனத்திற்கு தண்ணீர் இல்லை.  இதனால் மாடு விழுந்தான் பாறை, கவுண்டம்பட்டி, குறிச்சி, தென்கடை குறிச்சி, பனையூர், மேட்டுக்காடு, முதலைப்பட்டி, பாறைப்பட்டி, சூரியனூர், மேலப் பட்டி, நெய்தலூர் காலனி, தெற்கு பட்டி, கோப்பு உள்ளிட்ட கிரா மங்களில் 2,200 ஏக்கருகும் மேற்பட்ட விவசாய நிலங்களில் போதுமான பாசன தண்ணீர் இல்லா ததால் நெல் நாற்றங்கால்கூட இன்னும் போட முடியவில்லை. தற்போது அனைத்து விவசாய நிலங்களும் தரிசு நிலங்களாக காட்சி அளிக்கின்றன. எனவே உடனடியாக குளித் தலை பொதுப் பணித்துறை, ஆற்று  பாதுகாப்பு துறை அதிகாரிகள் தலையிட்டு கருங்கலாப்பள்ளி அருகே கட்டளைமேட்டு மெயின் வாய்க்காலில் கட்டுமான பணிக் காக போடப்பட்டுள்ள குழாய்களை அகற்றி, பாசனத்திற்கு உடனடி யாக தண்ணீரை திறந்து விட வேண்டும், விவசாயத்தையும் விவ சாயிகளையும் பாதுகாக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்பன  உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் குளித்தலை ஒன்றியக் குழு சார்பில் குளித் தலை பெரிய பாலத்தில் உள்ள ஆற்று பாதுகாப்புத்துறை பொதுப்  பணித்துறை அலுவலகம் முன்பு  கண்டன ஆர்ப்பாட்டம் நடத்து வதற்கு கட்சியினர், விவசாயிகள் கட்சியின் குளித்தலை ஒன்றிய செயலாளர் இரா.முத்துச்செல் வன் தலைமையில் ஆயத்தமா னார்கள்.  அப்போது ஆற்று பாதுகாப்புத் துறை, பொதுப்பணித் துறை, குளித்தலை காவல் ஆய்வாளர் ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, “கோரிக் கைகளை நிறைவேற்றும் வகை யில் கட்டளைமேட்டு மெயின் வாய்க்காலில் தற்காலிக இரும்பு பாலம் அமைத்து தண்ணீர் செல்ல  முடியாத நிலையில் உள்ள குழாய் களை அகற்றி விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் வெளி யேற்றப்படும்” என உறுதியளித்த னர். இதனைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பி.ராஜூ, விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட துணை தலைவர் பி.சங்கர நாராயணன், விச குளித் தலை ஒன்றியச் செயலாளர் பி. ரெங்கசாமி, நங்கவரம் கிளை செய லாளர் எஸ்.சித்தரசு, விச கிளைச்  செயலாளர் ராஜலிங்கம், குறிச்சி  ஊர் தலைவர் முத்துவீரன் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட விவ சாயிகள் கலந்து கொண்டனர்.