தென்காசி, ஜூன் 9
தென்காசி மாவட்டம், குற்றாலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த மாதம் காரில் லிப்ட் கேட்டு பணம் மற்றும் நகையை கொள்ளையடித்து சென்ற வழக்கின் குற்றவாளியான கணேசன் என்ற முனிய கணே சனை(23) தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தென்காசி மாவட்ட காவல் கண்காணிப் பாளர் இ டி சாம்சன் அறிவுறுத்தினார். அதன் பேரில், மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவின் பேரில் மேற்படி நபரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து பாளை யங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்