பெரம்பலூர், ஜூலை 4 -
பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள அரசு கல்லூரி களில் விடுதி கலந்தாய்வு நடத்த வலியுறுத்தி செவ்வா யன்று இந்திய மாணவர் சங்கம் சார்பில் மாவட்டச் செயலாளர் இரா.இராமகிருஷ்ணன் தலைமையில் மாவட்ட ஆட்சியர் க.கற்பகத்திடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
அம்மனுவில், தமிழகத்திலுள்ள அரசு கல்லூரி களில் ஜூலை 3 அன்று வகுப்புகள் துவக்கப்பட் டுள்ளன. ஆனால் முதலாம் ஆண்டு மாணவர்கள் வருகை குறைந்து காணப்படுகிறது. இதற்கு காரணம், விடுதி கலந்தாய்வு நடத்த தாமதம் ஏற்படுவதால் வெளி மாவட்டத்திலிருந்து மாணவர்கள் வரவில்லை. எனவே உடனடியாக விடுதி கலந்தாய்வு நடத்தி பட்டி யலை வெளியிட வேண்டும். விடுதியில் தங்கிப்படித்து இடைநின்ற மாணவர்களின் இடங்களை புதிய மாண வர்களுக்கு வழங்க நடவடிக்கை வேண்டும். மாவட்டத் திலுள்ள அனைத்து விடுதிகளிலும் மாணவர்களின் இருக்கையை அதிகப்படுத்த வேண்டும்” என தெரிவித்துள்ளனர். மனுவை பெற்றுக்கொண்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.