தஞ்சாவூர், ஜூலை 5 -
பள்ளி விடுதியில் தங்கி படித்து வரும் மாணவரை, விடுதி காவல்காரர் தாக்கியதால், மாணவரின் கை உடைந் தது குறித்து கல்வித்துறை அதிகாரி கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், மாணவர் விடுதி உள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர் சக மாணவர்களுடன் பேசி, விளையாடிக் கொண்டிருந்துள்ளார். சத்தம் கேட்ட நிலையில், விடுதியில் இரவு காவலராகப் பணியில் இருந்த தண்டாயுதபாணி, மாணவரை தகாத வார்த்தைகளால் திட்டி, இரும்பு கம்பியால் இடது கையில் பலமாக தாக்கியுள்ளார். இதில் மாணவனுக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த விடுதி பொறுப்பாளர், சக மாணவர்கள் உதவி யுடன் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்துள்ளார். ஆனால், மாணவர் தாக்கப்பட்ட சம்பவம் யாருக்கும் தெரியாமல் இருக்க, மாணவருக்கு விடுமுறை கொடுத்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளார்.
தான் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து மாணவர் பேசும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதுகுறித்து விடுதி மாணவர்கள், விடுதி காவல்காரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில் விடுதி தரப்பில் கூறுகையில், மாணவர் சத்தமிட்டு விளையாடிக் கொண்டிருந்தார். அதை கண்டிப்பதற்காக காவல்காரர் சென்ற போது, வேகமாக ஓடியதால் தவறி விழுந்து மாணவருக்கு கையில் அடி பட்டது என்று விளக்கம் அளித்துள்ள னர். இது தொடர்பாக கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வரு கின்றனர்.