மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த உறுப்பினரும், அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் சங்கத்தின் முன்னாள் நிர்வாகியுமான தோழர் வி.கார்த்திகேயன் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அவரது இல்லத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கட்சியின் நகரச் செயலாளர் ஜி.தாயுமானவன், சிஐடியு தலைவர்கள் ஜி.ரகுபதி, ஏ.கோவிந்தராஜ், டி.ஜெகதீசன், எஸ்.ஏகாம்பரம், ஜி.முத்துகிருஷ்ணன், கே.சிவசுப்பிரமணியன், கே.பிச்சைக்கண்ணு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.