districts

img

மாயூரம் வேதநாயகம் பிள்ளைக்கு நினைவரங்கம் அமைக்க கோரிக்கை

மயிலாடுதுறை, அக்.11 - முதல் தமிழ் நாவலான  பிரதாப முதலியார் சரித்தி ரத்தை எழுதியவரும், முதல்  இந்திய தமிழ் நீதிபதியுமான கவிஞர் வேதநாயகம் பிள்ளையின் 196 ஆவது பிறந்தநாளையொட்டி மயி லாடுதுறையில் அவர் அடக்கம் செய்யப்பட்டுள்ள கல்லறையிலும், அதே இடத்தில் அமைந்துள்ள அவரது உருவச் சிலைக்கும் பல்வேறு தரப்பினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். மயிலாடுதுறை சட்ட மன்ற உறுப்பினர் எஸ்.ராஜ குமார், மயிலாடுதுறை மறைமாவட்ட உதவி பங்குத்  தந்தை மைக்கேல் டைசன்,  மீத்தேன் திட்ட எதிர்ப்பு  கூட்டமைப்பு ஒருங்கிணைப் பாளர் பேராசிரியர் ஜெயரா மன், மயிலாடுதுறை தமிழ்ச்  சங்க நிறுவனர் ஜெனிபர் பவுல்ராஜ் மற்றும் தமிழ்  சங்கத்தினர், பல்வேறு அமைப்பினர், பொது மக்கள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.  தமிழ் வளர்ச்சிக்காக பாடுபட்டவரும், முதல் இந்திய தமிழ் நீதிபதியாக ஆங்கிலேய காலத்திலேயே தரங்கம்பாடி நீதிமன்றத்தில் பணியாற்றியவரும், மயி லாடுதுறை நகராட்சியின் முதல் தலைவராகவும் சிறப் பாக பணியாற்றி, பஞ்சம்  நிலவியபோது கஞ்சித் தொட்டிகளை அமைத்து ஏழைகளின் பசி தீர்த்த வருமான கவிஞர் மாயூரம் வேதநாயகம் பிள்ளைக்கு தமிழக அரசு நினைவரங்கம் அமைக்கப்படும் என அறிவித்துள்ளது. இதை  அரசு விரைவில் செயல்படுத் துவதோடு, அவர் பிறந்த-இறந்த நாட்களை அரசு நிகழ்ச்சியாக கொண்டாட வேண்டுமென முற்போக்கு அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.