அரியலூர், மே 13-
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண் டம் அருகே உதயநத்தம் ஊராட்சிக்குட் பட்ட கோடாலி கிராமத்தில் சுமார் 500 -க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இதில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் வசிக்கும் பகுதியில் இருந்த பழைய ரேசன் கடை கட்டிடம் சேதமடைந்த தால், அதனை இடித்துவிட்டு புதிய கட்டி டம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வரு கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மற் றொரு சமூகத்தினர் அனைத்து மக்க ளும் பயன்பெறும் வகையில் அரசுக்கு சொந்தமான பொது இடத்தில் ரேசன் கடையை கட்ட வேண்டும் என வலி யுறுத்தி வந்தனர்.
இந்நிலையில் கடந்த சில தினங்க ளுக்கு முன்பு பொது இடத்தில் ரேசன் கடையை கட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கிராம மக்கள் ரேசன் கார்டுகளை விஏஓ அலுவலகத்தில் ஒப்படைக்க வந்தனர். அப்போது பொதுவான இடத்தில் ரேசன் கடை கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்ததால், ரேசன் கார்டுகளை ஒப்படைக்கும் போராட் டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
ஆனால் ஏற்கனவே இருந்த இடத் திலேயே ரேசன் கடை கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படு கிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் ஜெயங்கொண்டம் தாலுகா அலுவலகத்தை முற்றுகை யிட்டு, சுமார் 247 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் அரசால் வழங்கப்பட்ட தங்களது ரேசன் கார்டுகளை ஜெயங் கொண்டம் தனி துணை வட்டாட்சி யரிடம் ஒப்படைத்தனர்.
கோடாலி கிராமத்தில் அரசுக்கு சொந்தமான பொது இடத்தில் ரேசன் கடையை கட்ட வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அனைத்து அலுவ லகங்களிலும் மனு அளித்து போராடி வருகிறோம். அரசு வேண்டுமென்றே மெத்தனப்போக்கில் உள்ளது. அனைத்து பொதுமக்களும் பயன்பெறும் வகை யில் மாரியம்மன் கோயில் அருகே, அரசுக்குச் சொந்தமான இடத்தில் ரேசன் கடையை கட்ட வேண்டும் என வலியுறுத் தினர்.