districts

திருச்சி முக்கிய செய்திகள்

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்காக இன்று புதுக்கோட்டையில் முன்னோட்டக் கருத்தரங்கம்

புதுக்கோட்டை, நவ.19- உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்காக புதுக் கோட்டை சாரதா கிராண்ட் கூட்ட அரங்கில் திங்களன்று (நவ.20) முன்னோட்டக் கருத் தரங்கம் நடைபெறுகிறது.  இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா தெரிவித்திருப்பதாவது: உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024 ஆம் ஆண்டு  ஜனவரி மாதம் 7, 8 தேதி களில் சென்னையில் நடை பெற உள்ளது. புதுக் கோட்டை மாவட்டத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024-க்கான மாவட்ட அளவிலான கருத்தரங்கம் திங்கட்கிழமை பிற்பகல் 3 மணியளவில் ஹோட்டல் புதுக்கோட்டை சாரதா கிராண்ட் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. மாவட்ட ஆட்சியர் தலை மையேற்கும் இவ்விழாவில், மாநில அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட் சிப் பிரதிநிதிகள், அரசு  அதிகாரிகள், தொழில்  அதிபர்கள், முதலீட்டாளர் கள்  கலந்து கொள்ள  உள்ளனர். இக்கருத்தரங் கில் அதிக முதலீடுகளை ஈர்ப்பதற்காக திட்டமிடப் பட்டுள்ளது. தொழில் நிறுவனங்கள் தொடங்கவும், தொய்வின்றி நடத்துவதற்கும் அரசின் நடைமுறைகள், அரசு தரும் ஆதரவுகள், தொழில்நுட்ப, நிதி மேலாண்மை மற்றும் சந்தைப்படுத்துதல் குறித்து உரிய ஆளுமைகள், வங்கி யாளர்கள் மற்றும் அலுவ லர்கள் உரை ஆற்றுகின்ற னர்.  தொழில் துறையினர்,  வணிகர், தொழில் முனை வோர், கைவினைஞர்கள், தொழில் வல்லுநர்கள், ஆலோசகர்கள், கல்வி நிறு வன வழிகாட்டிகள், சுயதொ ழில் ஊக்குநர்கள், ஆர்வ முள்ள மாணவர்கள் மற்றும்  இளைஞர்கள் இக்கூட்டத்தில்  கலந்து கொள்ளலாம். இவ்வாறு ஆட்சியர் தெரி வித்துள்ளார்.

திருவிளையாட்டம் பகுதியில் அடிக்கடி மின்தடை பொதுமக்கள், மாணவர்கள் அவதி

மயிலாடுதுறை, நவ.19 - மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் திருவிளையாட்டம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை அதி காலை முதல் மின்சாரம் இல்லாததால் பொது மக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் பெரும்  அவதிக்குள்ளாகினர். தமிழ்நாடு மின்சார வாரியத்தின்  சங்கரன்பந்தல் பிரிவு அலுவல கத்திற்குட்பட்ட திருவிளையாட்டம், ஈச்சங் குடி, ராதாநல்லூர், கடலி, குமாரமங்கலம், கலசம்பாடி, அரும்பாக்கம், குரும்பக்குடி உள் ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து மின்தடை ஏற்படுகிறது. ஏற்கனவே தொடர்ந்து பெய்து  வரும் கனமழையால் சிரமத்தை சந்தித்து வரும் சூழலில் அவ்வப்போது ஏற்படும் மின் தடை இயல்பு வாழ்க்கையை பாதிக்கிறது. சாதாரணமாக ஏற்படும் சிறிய மின்தடையை கூட பல மணி நேரம் கழித்தே  சரிசெய்வதாக பொதுமக்கள் மத்தியில் குற்றச்சாட்டு எழுகிறது. அதை சரிசெய்ய மின்வாரிய அதிகாரிகள் தயாராக இல்லை எனக் கூறப்படுகிறது. குறிப்பாக திருவிளையாட்டம் கிரா மத்தைச் சுற்றியுள்ள பகுதிகளின் பராமரிப்பு பணியாளராக உள்ள ஜெனகர் (மின் பாதை  ஆய்வாளர்) மின்தடை ஏற்பட்டால் உடனே  சீரமைக்காமல், அலட்சியத்துடன் செயல்படு வதாக பொதுமக்கள், விவசாயிகள் புகார்  அளிக்கின்றனர். பொதுமக்களை கட்டாயப் படுத்தி லஞ்சம் பெறுவது தொடர்பாக, சம்பந்தப்பட்ட மின் பாதை ஆய்வாளர் மீது  ஏற்கனவே பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளது. இந்நிலையில், மின்வாரிய அதிகாரிகள்  உடனடியாக நடவடிக்கை எடுத்து தடை யில்லா மின்சாரம் வழங்க வேண்டுமென பல்வேறு தரப்பினர் வலியுறுத்துகின்றனர்.

குழந்தைகள் தின விழிப்புணர்வு பேரணி

தஞ்சாவூர், நவ.19-  தேசிய குழந்தைகள் தினம், சர்வதேச குழந்தை கள் தினம் மற்றும் உலக குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு தினத்தை கடைப்பிடிக்கும் விதமாக, தஞ்சாவூர் மாவட்ட  குழந்தைகள் பாதுகாப்பு அலகு நடத்தும் விழிப்பு ணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் சனிக் கிழமை தஞ்சை ரயிலடியில் கொடியசைத்து துவக்கி வைத்தார். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ரஞ்சித் குமார் முன்னிலை  வகித்தார். பேரணி ரயிலடி யில் துவங்கி, அரண்மனை சங்கீத மஹால் வரை சென்றது. இப்பேரணியில் குழந்தைகள் நலக்குழு தலைவர்கள், அலுவ லர்கள், சைல்டு லைன் பணி யாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் குழந்தை இல்ல பணியா ளர்கள் கலந்து கொண்டனர். இப்பேரணிக்கு பின் சங்கீத மஹாலில் அறம் கலைக்குழுவினரின் கர காட்டம், ஒயிலாட்டம் மற்றும்  மேடை நாடகம் மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தஞ்சாவூர் பழைய பேருந்து நிலைய வளாகத்திலும், அறம் கலைக் குழுவினரின் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகள் நடை பெற்றன.

டிஎன்பிஎஸ்சி நடத்திய ஓட்டுநர்-நடத்துநர் தேர்வு புதுகையில் தேர்வு மையம் இல்லை: அலைக்கழிக்கப்பட்ட இளைஞர்கள்

அறந்தாங்கி, நவ.19- ஓட்டுநர்-நடத்துநர் பணிக்கு டிஎன்பிஎஸ்சி  நடத்திய தேர்வுக்கு புதுக்கோட்டையில் தேர்வு மையம் இல்லாததால் வெளி மாவட்டங் களுக்கு சென்று இளைஞர்கள் தேர்வு எழுதி னர். அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில்  காலியாக உள்ள 685 ஓட்டுநருடன் நடத்துநர்  பணிக்கு  12 ஆயிரம் பேர் விண்ணப்பித் திருந்தனர். இந்தத் தேர்வுக்காக தமிழ கத்தில் 10 முக்கிய நகரங்களில் உள்ள மையங் கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டன. குறிப் பாக புதுக்கோட்டையில் தேர்வு மையம் அறி விக்கவில்லை. இதனால் அருகில் உள்ள திருச்சி மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் தேர்வு எழுத வேண்டிய சூழல் ஏற்பட்ட தால், தேர்வு எழுத சென்றவர்கள் மிகவும் அவதிப்பட்டனர்.  இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்டம் கட்டுமாவடியைச் சேர்ந்த ராஜா கூறுகை யில், “இந்தப் பணிக்கு 12 ஆயிரம் பேர் விண் ணப்பித்திருந்தனர். ஆனால் தமிழகத்தில் 10 இடங்களில் மட்டுமே தேர்வு மையம் அனு மதிக்கப்பட்டது. எனக்கு தஞ்சை அருகே  உள்ள வல்லத்தில் தேர்வு மையம் அமைக்கப் பட்டது. இதனால் அதிகாலையிலேயே எழுந்து அவசர அவசரமாக தேர்வு மையத் திற்கு செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டது.  இன்னும் ஒரு சிலருக்கு தேர்வு மையத்தை  கண்டுபிடிப்பதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டது. விண்ணப்பித்த அனைவருக்கும் சொந்த  மாவட்டத்திலேயே தேர்வு மையம் அமைத்துக் கொடுத்திருந்தால் மிகவும் நன்றாக  இருந்திருக்கும். தேர்வில் பொதுத்தமிழ் பகுதியில் 50 கேள்விகளும், பொதுஅறிவு பகுதியில் 50 கேள்விகளும் கேட்கப்பட்டன. இதில் ஒரு சில கேள்விகள் மிகவும் கடின மாக இருந்தன. கனரக வாகன பொறியியல்  சம்பந்தமான கேள்விகளும் சற்று கடினமாக  இருந்தது. இருந்தாலும் அனைத்து கேள்வி களுக்கும் பதில் எழுதினோம்” என்றார்.

வேளாண்துறை சார்பில் வடகிழக்கு பருவமழை உதவி மையங்கள் அமைப்பு

தஞ்சாவூர், நவ.19 - தஞ்சாவூர் மாவட்டத்தில் வேளாண் துறை சார்பில் வடகிழக்கு பருவமழை உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன என அத்துறையின் இணை இயக்குநர் (பொ) எஸ்.ஈஸ்வர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், “தற்போது வடகிழக்கு பருவ மழை தொடங் கியுள்ளது. இதையொட்டி, தஞ்சாவூர் மாவட்டத்தில் வேளாண் துறை மூலம்  மழைக்காலங்களில் ஏற்படும் பயிர் பாதிப்பு கள், வாய்க்கால்கள் சீரமைப்பு, பாசனம் மற்றும் வடிகால் வாய்க்கால்களில் உள்ள இடையூறுகள், பூச்சி நோய் தாக்குதல்கள் ஆகியவை குறித்து விவசாயிகள் உரிய தகவல் தெரிவிப்பதற்கு ஏதுவாக அந்தந்த  வட்டார வேளாண் உதவி இயக்குநர் அலுவ லகங்கள், தஞ்சாவூர் வேளாண் இணை இயக்குநர் அலுவலகம் ஆகியவற்றில் வட கிழக்கு பருவமழை கண்காணிப்பு மற்றும்  உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. எனவே, விவசாயிகள் பருவமழை யால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்த தக வல்களை தெரிவிக்க தஞ்சாவூர் மாவட்டத் திலுள்ள வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகங்களைத் தொடர்பு கொள்ளலாம்.  வட்டார வேளாண்மை உதவி இயக்கு நர் அலுவலகம் மற்றும் தொடர்பு எண் விவரம்: தஞ்சாவூர் - 6379399728, பூதலூர்  - 9443336758, திருவையாறு - 81899 56026, ஒரத்தநாடு - 9942237587, திரு வோணம் - 9600082492, பட்டுக்கோட்டை  - 8526062230, மதுக்கூர் - 99433 87147, பேராவூரணி - 6381918376, சேது பாவாசத்திரம் - 9443785789, பாபநாசம் - 7904069083, அம்மாப்பேட்டை - 93440 72899, கும்பகோணம் - 8754243626, திருவிடைமருதூர் - 9751786010, திருப்ப னந்தாள் - 9444846155, வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகம் - 04362 - 267679 ஆகிய எண்களுக்கு தொலைபேசி  மூலமாகவோ அல்லது நேரிலோ தொடர்பு  கொள்ளலாம்” என்றார்.

இணையவழியில் வேலை தருவதாக கூறி ரூ.12.82 லட்சம் மோசடி

தஞ்சாவூர், நவ.19 - இணையவழி மூலம் இருவரிடம் ரூ.12.82  லட்சம் மோசடி செய்த மர்ம நபர்களைக் காவல் துறையினர் தேடி வருகின்றனர். தஞ்சாவூர் அருகே வேலை தேடிக் கொண்டிருக்கும் 24 வயது இளைஞரின் பேஸ் புக் மூலம் மர்ம நபர் ஜூலை மாதம்  அறிமுகமானார். அப்போது, இணையவழி மூலம் வணிகம் செய்யலாம் என்றும், அதற்கு  பணப்பரிவர்த்தனை, இருப்பு பராமரிப்பு, சர்வர் பிரச்சனை, வழக்குரைஞர் கட்டணம் என பல்வேறு கட்டணங்களைச் செலுத்த வேண்டும் என மர்ம நபர் கூறினார். இதை நம்பிய இளைஞர், மர்ம நபர் கூறிய வங்கிக்  கணக்குக்கு இணையவழி மூலம் பல்வேறு தவணைகளில் ரூ. 5 லட்சத்து 97  ஆயிரத்து 400 செலுத்தினார். ஆனால், அதன் பின்னர் மர்ம நபரை தொடர்பு கொள்ள முடியாமல் போன இளை ஞருக்கு, தான் ஏமாற்றப்பட்டது தெரிய வந்தது. இதுகுறித்து இளைஞர் அளித்த புகா ரின் பேரில் தஞ்சாவூர் இணையதளக் குற்றப்  பிரிவினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற் கொண்டுள்ளனர். இதேபோல, தஞ்சாவூரைச் சேர்ந்த ஓய்வு  பெற்ற வங்கி ஊழியரின் வாட்ஸ் ஆப்  எண்ணுக்கு இணையவழி மூலம் வேலைத்  தருவதாகவும், டாஸ்க்குகளை நிறைவேற்றி னால் ரேட்டிங் உள்ளிட்டவை வழங்கப்படும் எனவும் ஆகஸ்ட் மாதம் தகவல் வந்தது.  இதை நம்பிய ஓய்வுபெற்ற வங்கி  ஊழியர், மர்ம நபரின் வங்கிக் கணக்குக்கு  பல்வேறு தவணைகளில் ரூ. 6 லட்சத்து 85 ஆயிரத்து 21 செலுத்தினார். அதன் பின்னர் மர்ம நபரின் தொடர்பு துண்டிக்கப்பட்டதால், மோசடி நிகழ்ந்துள்ளது குறித்து தஞ்சாவூர் இணையதள குற்றப் பிரிவில் புகார் செய்தார். இதன் பேரில் காவல் துறையி னர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண் டுள்ளனர்.

லயன்ஸ் விழா:  நலத்திட்ட உதவிகள் வழங்கல்

தஞ்சாவூர், நவ.19 - தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் பேராவூரணி லயன்ஸ் சங்கம், அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கம் சார்பில்,  மாவட்ட ஆளுநர் ஆண்டு அலுவல் வருகை தின விழா நடைபெற்றது.  நிகழ்ச்சிக்கு, பேராவூரணி லயன்ஸ் சங்கத் தலைவர் கே.சிவநாதன் தலைமை வகித்தார். அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கத் தலைவர் எம்.அகமது கபீர் (குப்பாஷா) வர வேற்றார். பேராவூரணி செயலாளர் ஜி.ராஜா, அதிராம்பட்டி னம் செயலாளர் எம்.ஹாஜா நசூர்தீன் செயலர் அறிக்கை வாசித்தனர்.  குருவிக்கரம்பை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கட்டில்கள், மெத்தைகள், முதியோர் இல்லத்திற்கு கொசு வலை, பேராவூரணி அரசு கிளை நூலகத்திற்கு வாட்டர்  டேங்க் மற்றும் மின் மோட்டார், ஏழைப் பெண்ணுக்கு  தையல் மெஷின், கொன்றைக்காடு அரசு பள்ளிக்கு வாட்டர்  பியூரிஃபையர் என ரூ.1 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவி களை பயனாளிகளுக்கு வழங்கி, மாவட்ட ஆளுநர் எம். இமயவரம்பன் சிறப்புரையாற்றினார்.

திண்டுக்கல்லில் பிரபல  பிரியாணிக்கடைக்கு நோட்டீஸ் 

திண்டுக்கல், நவ.19- திண்டுக்கல்லில் பிரபல பிரியாணிக் கடைக்கு மாநக ராட்சி சுகாதாரத்துறை அபராதம் விதித்துள்ளது. சில தினங்களுக்கு முன்பு வாடிக்கையாளர்கள் ஒருவர் திண்டுக்கல்லில் உள்ள ஒரு பிரியாணி கடையில் ஆர்டர் செய்து பிரியாணி வாங்கி சாப்பிட்டுள்ளார்.  இதில் கரப்பான் பூச்சி இருந்தது குறித்து கடை ஊழி யர்களிடம் கேட்ட போது பதில் இல்லை. இந்த செய்தி  ஊடகங்களில் வரவே மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கலைவாணி மற்றும் குழுவினர் ஆய்வு  மேற்கொண்டு 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்  பட்டுள்ளது. ஓட்டல் நிர்வாகத்திடம் 15 நாட்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.