திருச்சிராப்பள்ளி, ஜன.27 - ஆயுள் காப்பீட்டு நிறுவனம் திருச்சி-1 கிளையில் பணியாற்றும் ஊழியர்கள் சார்பில், சீராத்தோப்பு அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. விழாவிற்கு அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்க தஞ்சைக் கோட்டத் தலைவர் எஸ்.செல்வராஜ் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் வி.சேதுராமன், ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கு பயன்படும் வகை யில் ரூ.1,40,000 மதிப்புள்ள வட்ட மேஜைகள், சிறிய நாற்காலிகள், ஸ்டீல் பெஞ்ச் ஆகிய வற்றை வழங்கினார். நலச்சங்க ஊழியர்கள், வட்டாரக் கல்வி அலுவலர், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.