நாகப்பட்டினம், ஜன.10- நாகப்பட்டினம் நக ராட்சி நாகூர் அம்பேத்கர் தெருவைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி பெண் ஒருவரின் வீடு கடந்த மாதம் பெய்த கனமழையில் இடிந்து விழுந்தது. இதனால் அவர் வீடின்றி தவித்து வருகிறார். தமிழக கடலோர கிரா மங்களில், கடந்த இரண்டு மாதங்களாக பெய்து வரும் வடகிழக்கு பருவமழை நல்ல மழை பொழிவைத் தந்துள்ளது. அதேசமயம் பல்வேறு பாதிப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது. தற்போதும் மழை நீடிக்கும் நிலையில் வீடுகள், விவசாயப் பகுதிகளில் பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது. நாகப்பட்டினம் மாவட் டம் நாகூர் அம்பேத்கர் பகுதி யில் கடந்த 2004 ஆழிப் பேரலையால் பாதிக்கப் பட்ட மக்களுக்கு தனியார் தொண்டு நிறுவனங்கள் மூலம் 200 கான்கிரீட் வீடு கள் கட்டிக் கொடுக்கப் பட்டுள்ளன. அந்த வீடுகள் அனைத்தும் தற்போது சேத மடைந்த நிலையில் உள்ளன. வீட்டின் மேற்கூரை மீது தார்ப்பாய், கீற்று, பிளக்ஸ் பேனர் உள்ளிட்டவற்றை கொண்டு கூரை வேய்ந்துள் ளனர். இந்நிலையில், அங்கு மாற்றுத்திறனாளி பெண் வினோதினி (30) என்பவர் வசித்து வருகிறார். இவ ருக்கு 6 மற்றும் 2 வயதில் இரு பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த நவம்பர் மாதம் பெய்த கனமழை யால், இவரது வீட்டின் மேற் பகுதி கான்கிரீட் தளம் முற்றி லுமாக இடிந்து விழுந்து விட்டது. நல்வாய்ப்பாக வீட்டில் உள்ள அனைவரும் உயிர் தப்பினர். தற்போது வரை இவர் கள், இடிந்து போன அந்த வீட்டிலேயே தங்கியிருக்கின் றனர். இரவு உறங்குவதற்கு மட்டும் பக்கத்து வீடு களுக்கு சென்று விடுகின்ற னர். சமையல் உள்ளிட்ட மற்ற அனைத்துப் பணி களுக்கும் இடிந்த வீட் டையே பயன்படுத்தி வரு கின்றனர். அம்பேத்கர் தெரு வில் உள்ள அனைத்து வீடு களும் பாதிப்புக்கு உள்ளான நிலையில், புதிய வீடுகள் கட்டித்தர வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாகை நகரச் செயலாளர் க. வெங்கடேசன் கூறுகையில், “நாகூர் அம்பேத்கர் தெரு வில் உள்ள அனைத்து வீடு களும் கட்டப்பட்டு 18 ஆண்டு கள் கடந்த நிலையில், பல வீடுகள் சேதமடைந்து உள்ளன. இத்தெருவில் உள்ள மக்கள் நகராட்சியில் துப்புரவு பணி மற்றும் தின சரி கூலி வேலை செய்து வருகின்றனர். மாற்றுத்திறனாளியான வினோதினியின் கணவர் டெய்லர் கடை வைத்து பிழைப்பு நடத்தி வரு கிறார். எனவே அவருக்கு உட னடியாக அரசு சார்பில் புதிய வீடுகட்டித் தர வேண்டும். பாதிப்புக்குள்ளான அனைத்து வீடுகளுக்கும் புதிய வீடுகள் கட்டித் தர வேண்டும். இதுகுறித்து மாவட்ட ஆட்சியரை சந்தித்து வினோதினியின் சார்பில் புகார் மனு கொடுக்கப்பட்டு உள்ளது” என்றார்.