அறந்தாங்கி, பிப்.7- புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி வட்டம் இராஜேந்திரபுரம் கிராமத்தில் ரூ.6.11 கோடி மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் நலத்துறை ஆணையர் சம்பத் தலைமையில், மாவட்ட ஆட்சியர் மு. அருணா முன்னிலையில் வழங்கினார். முன்னதாக மாவட்ட ஆட்சியர் மு.அருணா தலைமையில் இராஜேந்திரபுரம் ஊராட்சி கடை வீதியில் ஆலங்குடி சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பயணியர் நிழற்குடையினை அமைச்சர் மெய்யநாதன் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் அறந்தாங்கி வருவாய் கோட்டாட்சியர் சிவக்குமார், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் அமீரபாஷா, துணை ஆட்சியர் (பயிற்சி) கௌதம், இணை இயக்குனர் வேளாண்மை சங்கர லட்சுமி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உலகநாதன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.