திருச்சிராப்பள்ளி, டிச.3- திருச்சி செயிண்ட் ஜான் வெஸ்ட்ரி மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் தின விழாவில் அமைச்சர் கே.என்.நேரு 52 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.11.33 லட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். விழாவில் 6 மாற்றுத்திறனா ளிகளுக்கு தலா ரூ.99,999 மதிப்பீட் டில், பேட்டரியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலிகளும், 10 மாற்றுத்திற னாளிகளுக்கு தலா ரூ.10,400, மதிப்பீட் டில் மூளை முடக்குவாதத்தால் பாதிக் கப்பட்டோருக்கான சிறப்பு சக்கர நாற் காலிகளும், 3 சிறப்பு பள்ளிகளுக்கு தலா ரூ.26,664 மதிப்பீட்டில் பிறருடன் பேசி தொடர்புகொள்ள கூடிய மென் பொருளுடன் ஆவாஸ் சிறியவகை மடிகணினிகளும், 5 மாற்றுத்திறனாளி களுக்கு தலா ரூ.25,000 வீதம் சிறு மற்றும் குறுந்தொழில் வங்கிகடன் மானியம் வழங்கும் திட்ட ஆணை களும், 10 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.3,058 மதிப்பீட்டில் காதுக்கு பின்புறம் அணியும் காதொலிக் கருவி களும், 15 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.2000 வீதம் அறிவுசார் குறை பாடுடையோருக்கான மாதாந்திர பரா மரிப்பு உதவித்தொகை வழங்கும் திட்ட ஆணையினையும், ஒருமாற்றுத்திற னாளிக்கு ரூ.63600 மதிப்பீட்டில் முதல மைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் செயற்கை கால் என மொத்தம் 52 மாற்றுத்திறனாளி களுக்கு ரூ.11,33,166 மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை அமைச் சர் வழங்கினார். மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் அன்பழகன், சட்ட மன்ற உறுப்பினர்கள், மாவட்ட மாற்றுத் திறனாளி நல அலுவலர் சந்திர மோகன், பல்நோக்கு மறுவாழ்வு உதவி யாளர் ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.